Headlines

முபாரக் விடுதலை

900 பேரை கொன்ற வழக்கில் இருந்து எகிப்தின் முன்னால் அதிபர் ஹோஸ்னி முபாரக் இன்று விடுவிக்கப்பட்டார். அராபிய வசந்தம் என்ற பெயரில் வளைகுடா நாடுகளில் நிகழ்ந்த மக்கள் புரட்சி, அரசியல் மாற்றத்தையும், ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எகிப்தில் அந்நாட்டின் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தெழுந்தபோது ராணுவம் கையாண்ட அடக்குமுறை நடவடிக்கையில் போராட்டக்காரர்களில் சுமார் 900 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த படுகொலை தொடர்பாக நடைபெற்ற விசாரணையில்…

Read More

ஈபிள் கோபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆடுகள்

பிரான்ஸ் நாட்டில் விவசாயப் பண்ணைகளில் வளர்ந்து வரும் செம்மறியாடுகளை ஓநாய்கள் தாக்கி வருகின்றன. அவற்றை காப்பதற்கு பிரான்ஸ் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து நேற்று பாரீஸ் நகரில் ஈபிள் கோபுரத்தின் முன் விவசாயிகள் ஆடுகளுடன் போராட்டம் நடத்தினார்கள்.பிரான்ஸ் நாட்டின் மத்திய பகுதியான அவுவர்ஜின் மாநிலத்தில் ஏராளமான விவசாய பண்ணைகள் உள்ளன. இங்குள்ள விவசாயிகள் விவசாயத்துடன் ஏராளமான செம்மறியாடுகளையும் வளர்த்து வருகின்றனர்.இங்கு வளரும் செம்மறியாடுகளை, அப்பகுதி காடுகளில் பெரும் எண்ணிக்கையில் உலவி வரும் ஓநாய்கள் கொன்று வருகின்றன….

Read More

எதிரணி 59 வீத வாக்கைப் பெறுமெனக் கூறிய புலனாய்வு அதிகாரி பதவி நீக்கம் கரு ஜயசூரிய தகவல்

2015 ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு 59 சதவீதமும் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு 41 சதவீத வாக்குகளுமே கிடைக்குமென புலனாய்வுத் துறையினரின் கணிப்பீட்டின் மூலம் தெரியவந்துள்ளதாக செய்தி ஊடகமொன்றுக்கு கசிந்ததையடுத்து புலனாய்வுத் துறையின் உயரதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தலைமைத்துவ சபையின் தலைவர் கரு ஜயசூரிய நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். பாரிய அரசியல் மாற்றம் உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் உண்மைகள் வெளிவரும் போது, மகிந்த ராஜபக்ஷ தடுமாற்றமடைந்து தான்…

Read More

கிரிக்கெட் வரலாற்றை உலுக்கியெடுத்த மரணங்கள்

ஹுயூஸ் மரணச் செய்தி கேட்டு டெல்லி விக்கெட் கீப்பர் புனீத் பிஸ்ட், பந்தில் உங்கள் பெயர் எழுதப்பட்டிருந்தால் எந்த தலைகவசத்தாலும் உங்களை காப்பாற்ற முடியாது என்றார். இவரின் வார்த்தைகளுக்கு ஏற்ப கிரிக்கெட் வரலாற்றில் பல சோகமான சம்பவங்கள் நடந்துள்ளன. வேகமான பவுன்சரால் தான் ஒரு வீரர் தாக்கப்படுவார் என்று கிடையாது. சுழற்பந்தால் தாக்கப்பட்டு இறந்தவர்களும் உண்டு. * 1870ம் ஆண்டு லண்டன் லார்ட்சில் நடந்த முதல்தர போட்டியில் நாட்டிங்காம்ஷைர் வீரர் ஜார்ஜ் சம்மர்ஸ் (வயது 25) துடுப்பெடுத்தாடி…

Read More

அட்டாளைச்சேனை 15 ஆம் பிரிவைச் சேர்ந்த சரிபுதீன் ஷஹீர் சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்

பர்ஸாத் அட்டாளைச்சேனை 15 ஆம் பிரிவைச் சேர்ந்த சரிபுதீன் ஷஹீர் கல்முனை மாவட்ட நீதி நிருவாக வலயத்திற்கான சமாதான நீதவானாக அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி யு.து.அலக்ஸ் ராஜா முன்னிலையில் அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இவர் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை  பழைய மாணவரும் இலங்கைதிறந்த பல்கலைக்கழக சட்ட பீட மாணவரும்இவிஸ்டம் இளைஞர்  கழகத்தின்  தலைவரும் ஆவார். தற்போது அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கூட  தாதி உத்தியோகத்தராக    கடமையாற்றும் இவர் அல்ஹாஜ்  எஸ்.எல்….

Read More

வைக்கோவுக்கு சாமி எச்சரிக்கை

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராகிய சுப்ரமணிய சுவாமி தனது ருவிட்டர் பக்கத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’தூக்கி எறியப்படுவதற்குள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நீங்களாக வெளியேறி விடுங்கள்’’ என்று வைகோவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை ஆளும் அரசிலிருந்து மதிமுக கட்சி விலக வேண்டும் என கட்சித் தொண்டர்கள் எற்கனவே கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Read More

ஜனாதிபதி வேட்பாளர்களை சந்திக்கிறார் இந்திய பாதுகாப்பு ஆலோசகர்

இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளர்களை இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் சந்திக்கவுள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் தோவால், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவையும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவையும் சந்திக்க உள்ளார். 2014 காலி பேச்சுவார்த்தை நிகழ்வில் சிறப்பு உரையொன்றை தோவால் ஆற்ற உள்ளார். அதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, எதிர்க்கட்சித் தலைவர்…

Read More

சிறிசேன நிகழ்த்திய திடீர் புரட்சி!

அடுத்த வருடம் நடை பெறவுள்ள ஜனாதிபதி தேர் தலில் போட்டியிட உள்ள பொது எதிரணியின் கூட்டமைப்பா னது இலங்கை அரசியலில் எதிரியும் இல்லை நண்பனும் இல்லை என்ற நிலையை தோற்று வித்துள்ளது. மைத்திரிபால சிறிசேன வுக்கு பொருத்தமான எதிர்த் தரப்பு வேட்பாளராக இருக்கும் தகுதி இருக்கிறதா என்பதில் சிறு சந்தேகமிருக்கலாம். ஆனால், அவரது தகுதியை மேலும் உயர்த் தும் வகையில் பல பிரமுகர் களும் அரசியல்கட்சிகளும் அவ ரைச் சார்ந்து நிற்கிறார்கள். இந்தப் பட்டியலில் முதன்மை வகிப்பவராக…

Read More

ஜாதிக ஹெல உறுமய மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு

புரிந்துணர்வின் மூலம் இணக்கப்பாட்டிற்கு வந்த பின்னர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரான மைத்ரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக ஜாதிக ஹெல உறுமய குறிப்பிடுகின்றது. புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் எதிர்வரும் திங்கட்கிழமை கைச்சாத்திடவுள்ளதாக ஜாதிக ஹெல உருமயவின் தலைவர் அதுரலியே ரத்தன தேரர் தெரிவிக்கின்றார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை பாராளுமன்றத்திற்கும், நீதிமன்றத்திற்கும் பொறுப்புக்கூறும் வகையில் மறுசீரமைத்தல், தேர்தல் முறைமையில் மாற்றம், ஆணைக்குழுக்களை நியமித்தல் போன்ற அடிப்படை காணரங்களை உள்ளடக்கியதாக புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக ரத்தன தேரர் கூறுகின்றார்….

Read More

அமைச்சர் றிஷாதின் முடிவுக்கு தலைவணங்குவோம்! வவுனியா மாவட்ட தமிழ் மக்கள் அதிரடி அறிவிப்பு (படங்கள் இணைப்பு )

ஏ.எச்.எம்.பூமுதீன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் எவருக்கு ஆதரவளிக்க அமைச்சர் ரிசாத் பதயுதீன் முடிவு செய்கிறாரோ அந்த முடிவுக்கு நாம் தலைவணங்குவோம் என வவுனியா தமிழ் மக்கள் இன்று அறிவித்துள்ளனர். வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இன்று (29) காலை இடம்பெற்ற தேர்தல் தொடர்பில் மக்களின் கருத்தை அறியும் கலந்துரையாடலின் போதே இந்த அறிவிப்பை தமி;ழ் மக்கள் விடுத்தனர். வவுனியா மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்தும் பல்வேறு துறைசார்ந்தோர் இக்கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர். இதன்போது அவர்கள் அனைவரும் கலந்துரையாடலின் முடிவில் எழுந்து…

Read More

மௌலவி ஆசிரியர் நியமனம் – ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைப்பது பற்றி ஆலோசனை

2010ம் ஆண்டுக்குப்பின் வழங்கப்படாதிருக்கும் மௌலவி ஆசிரியர் நியமனத்தை மீண்டும் வழங்கக்கோருவது பற்றி ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன் வைப்பது பற்றிய ஆலோசனை கூட்டமொன்றை ஏற்பாடு செய்ய உலமா கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் முதற்கட்டமாக இது பற்றிய கருத்தரங்கை கல்முனையில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார். 1992 முதல் வழங்கப்படாதிருந்த மௌலவி ஆசிரியர் நியமனத்தை வழங்குவதற்காக உலமா கட்சி பாரிய அளவில் போராடியதன் பயனாக கடந்த…

Read More

மஹிந்த ராஜபக்ஸவையும், அவரது குடும்பத்தினரையும் பாதுகாப்பேன் – மைத்திரிபால சிறிசேன உறுதி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவையும் அவரது குடும்பத்தினரையும் பாதுகாப்பதாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களோ அல்லது சர்வதேச சக்திகளோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடமளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றச்செயல்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் ஜனாதிபதியையோ அல்லது படைவீரர்களையோ நிறுத்த இடமளிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார். சரியான நல்லிணக்கத் திட்டமொன்று அமுல்படுத்தப்பட உள்ளதாகவும், அனைத்து இனங்களுக்கு இடையிலும் நல்லுறவை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மைத்திரிபால…

Read More