Headlines

இலங்கைக்கு புதிய பாகிஸ்தானிய பாதுகாப்பு அதிகாரி நியமனம்

இலங்கையில் உள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரகத்துக்கு பாதுகாப்பு அதிகாரியாக புதியவர் ஒருவர் நியமனம் பெற்றுள்ளார். கேர்ணல் மொஹமட் இர்ஷாத் கான் என்பவரே இந்த பதவிக்கு நியமனம் பெற்றுள்ளார். இவர் நேற்று முன்தினம் இலங்கையின் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரட்நாயக்கவை உத்தியோகபூர்வமாக சந்தித்தார். இதன்போது இலங்கை இராணுவத்தினருக்கும், பாகிஸ்தான் இராணுவத்தினருக்கும் இடையில் புதிய முயற்சிகளை முன்கொண்டு செல்வது தொடர்பாக ஆராயப்பட்டதாக இலங்கை இராணுவ இணைத்தளம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் புதிய முயற்சிகளை முன்னெடுத்து செல்வதில் பாகிஸ்தானிய அரசாங்கம் ஆவலுடன் இருப்பதாக…

Read More

மோடியை சந்திக்க ஒபாமா ஆர்வம்

நரேந்திரமோடி பிரதமராக பதவி ஏற்றதும் அவருக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது மோடியை அமெரிக்கா வருமாறு ஒபாமா அழைப்பு விடுத்தார். இதை மோடி ஏற்றுக்கொண்டார். வருகிற செப்டம்பர் மாதம் மோடி ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயார்க் செல்கிறார். ஐ.நா.சபையில் உரையாற்றிய பின்பு வாஷிங்டன் செல்கிறார். அங்கு வெள்ளை மாளிகையில் செப்டம்பர் 30–ந்தேதி அதிபர் ஒபாமாவை மோடி சந்தித்து பேச்சு நடத்துகிறார். மோடி– ஒபாமா சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல் தயாராகி வருகிறது….

Read More

2000 ஆண்டு பழமையான மட்பாண்ட துண்டுகள் கண்டுபிடிப்பு

இரத்தினபுரி மாவட்டம், பலாங்கொட,கிரிமகுல்கொல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராச்சியின் போது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மட்பாண்ட துண்டுகள் கிடைத்துள்ளன. களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜா சோமதேவ உள்ளிடட குழுவினர் இந்த அகழ்வாராச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று இந்த பண்டைய கால மட்பாண்ட துண்டுகள் கிடைத்துள்ளன.

Read More

காஸாலை மீண்டும் கட்டியெழுப்ப தயாராக இருக்கிறோம் – கட்டார்

இஸ்ரேல் – ஹமாஸ்  யுத்த நிறுத்தத்தை வரவேற்றிருக்கும் கட்டார் காசா பகுதியை வெகு விரைவில் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான பங்களிப்பை செய்ய தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. யுத்த நிறுத்தத்தை வரவேற்றிருக்கும் துருக்கி அனைத்து எல்லை கட்டுப்பாடுகளையும் இஸ்ரேல் உடன் அகற்றிக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

Read More

ஜம்இயத்துல் உலமா, ஷூரா சபை ஆகியவற்றிக்கு பொதுபல சேனா சவால்!

ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவினர் நடத்திய பயங்கரவாத தாக்குதல் குறித்து தமது நிலைப்பாடுகளை வெளியிடுமாறு பொதுபல சேனா அமைப்பு, அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா மற்றும் ஷூரா சபை ஆகியவற்றிக்கு சவால் விடுத்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த வித்தானகே. இந்த அமைப்புகள் ஆபிரிக்காவில் இயங்கி வரும் போக்கோ ஹராம் பயங்கரவாத அமைப்பு பற்றிய தமது நிலைப்பாட்டையும் தெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுள்ளார். இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் மேற்கொண்டுள்ள கொடிய…

Read More

10 வயது சிறுவன் வளர்த்த வாழைமரமொன்றில் அதிசயம்

(TM) இரத்மலானையைச்சேர்ந்த 10 வயதான நவம் அஞ்சன ஜயக்கொடி என்ற மாணவனால் எவ்விதமான பசளைகளும் இடாமல் வெறுமனே தண்ணீர் மட்டுமே ஊற்றி வளர்க்கப்பட்ட புளிவாழைமரமொன்று ஈன்ற குலையில், அதிசயமான வாழைச்சீப்பொன்று இருந்துள்ளது. அச்சீப்பில் 71 காய்கள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் வேலை வாய்ப்புக்களை பெறுவது தொடர்பில் பேச்சுவார்த்தை

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நிலவுகின்ற தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக தலைவர் அமல் சேனாதிலங்கார ஆகியோருக்கு இடையில் அண்மையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுற்றுலா கவர்ச்சிமிக்க மற்றும் தொழில் வாய்ப்புகள் பரவலாக காணப்படுகின்ற நாடு என்ற வகையில் ஐக்கிய அரபு…

Read More

” காஸா இஸ்ரேலின் கைகளை முறித்து விட்டது “

இஸ்மாஈல் ஹனிய்யாவின் பேச்சிலிருந்து … ” எமது போராட்டமும், மக்களது உறுதியும் சேர்ந்து தான் காஸாவின் வெற்றியை உருவாக்கியது” ” எட்டு வருட முற்றுகைக்குள் இருந்தாலும் காஸா மக்கள் உண்மையில் வீரர்கள்.” ” காஸா இஸ்ரேலின் கைகளை முறித்து விட்டது “ ” இந்த உறுதிக்கு சுவனமும், உலகில் வெற்றியும் , மஸ்ஜிதுல் அக்ஸாவில் தொழக் கிடைப்பதும் தான் கூலி” “இந்தப் போராட்டம் எங்களின் விவகாரத்தைப் பற்றி கவனம் செலுத்தும் படியாக முழு உலகையும் மாற்றி இருக்கிறது…

Read More

எமக்குத் துரோகம் இழைத்த அரபு நாடுகள் – ஹமாஸ்

Abusheik Muhammed ஹமாஸ் வெளியிட்டுள்ள செய்திகள் : 1.- பலஸ்தீன் முஜாஹித்களுடன் இணைந்து மக்களும் வெளிப்படுத்திய உறுதி எதிரிகளை தோற்கச் செய்துள்ளது. 2- இஸ்ரேல், 51 நாட்களாக சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட ஆயுதங்களை பாலஸ்தீன் மக்களுக்கு எதிராக செயல்படுத்தியது பாடசாலைகள், பள்ளிவாயல்கள், விளைச்சல் நிலங்கள், வீடுகள், குடியிருப்புக் கட்டிடங்கள் … போன்ற அனைத்தின் மீதும் காட்டுமிராண்டித் தனமாக தாக்குதல் நடத்தியது. 2100 பேருக்கும் அதிகமானவர்கள் இறை பாதையில் கொல்லப்பட்டனர். 11000 பேர் வரை காயப்பட்டனர். இவர்களுள்…

Read More

கேன் அமெரிக்கன் பல்கலைக்கழகம் (Girne American University) இலங்கையில் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும்

(அகமட் எஸ். முகைடீன்) கேன் அமெரிக்கன் பல்கலைக்கழகம் (Girne American University) இலங்கையில் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் மெற்றொபொலிடென் கல்லூரியுடன் ஒப்பந்தம் ஒன்றை அண்மையில் கைச்சாத்திட்டது. கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் தேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும் மெற்றொபொலிடென் கல்லூரியின் ஸ்தாபக தலைவருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் ஒரு வார கால துருக்கி நாட்டிற்கான விஜயத்தின்போது மேற்படி ஒப்பந்தம் கேன் அமெரிக்கன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சேர்ஹாட் அக்பினர் மற்றும் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்…

Read More

காத்தான்குடியில் குரங்குகளை சுட்டுக் கொல்லத் திட்டம்

(BBC) வீடுகள் மற்றும் கடைகளில் புகுந்து தொல்லை கொடுக்கும் குரங்குகளை சுட்டுத்தள்ள அரசிடம் துப்பாக்கியை கேட்டுள்ளது காத்தான்குடி நகரசபை. இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேசத்தில் நாளாந்தம் அதிகரித்து வரும் இத்தொல்லையை கட்டுப்படுத்த குரங்குகளை சுடுவதற்கு காத்தான்குடி நகர சபை தீர்மானித்துள்ளது. இதற்கான அனுமதி நகர சபை நிர்வாகத்தினால், பாதுகாப்பு அமைச்சிடம் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நெரிசல் மிகுந்த காத்தான்குடி பிரதேசத்திற்குள் கூட்டம் கூட்டமாக வரும் குரங்குகளை கலைப்பதற்கு வனவிலங்குத்துறை அதிகாரிகளின் உதவி கோரப்பட்டபோது, அவர்கள் ஆட்கள் பற்றக்குறை…

Read More

ஹமாசுடன் நீண்ட கால போர் நிறுத்த ஒப்பந்தம்: எல்லையில் உள்ள இஸ்ரேல் படைகள் வாபஸ்

இஸ்ரேல் ராணுவம், காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்புக்கும் இடையே நடைபெற்ற தொடர் சண்டையால் காசா அமைதியிழந்து காணப்பட்டது. இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இருதரப்பும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று எகிப்து அரசு கேட்டுக்கொண்டது. அந்நாட்டு அரசின் தீவிர முயற்சியால் முதலில் சில மணி நேரங்களும், அதன்பின்னர் சில நாட்களுக்கும் போர் நிறுத்தம் அமுலில் இருந்தது. இதனால், எந்த நேரத்திலும் தாக்குதல் தொடங்கும் என்ற அச்ச உணர்வு மக்களிடையே இருந்தது….

Read More