தாக்குதல் மேற்கொள்ளுபவர்களைப் பொலிசார் பாதுகாக்கின்றனர் ; கபே
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவதை தடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சி அலுவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதலை கண்டிப்பதாக தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பாக கபே வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் குறித்த அறிவிப்பிற்கு பின்னர் முக்கிய எதிர்கட்சிகளும், அவற்றின் செயற்பாடுகளும் மிரட்டல், அச்சுறுத்தல், வன்முறை தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன, அதன் உச்சக்கட்டமே சிறிகோத்தா மீதான தாக்குதல். குறிப்பிட்ட தாக்குதல் ஐக்கிய தேசிய…
