Headlines

முஸ்லிம் சமூகம் றிஷாத்தை பாராட்டுகின்றது: விடத்தல்தீவு இஸ்லாமிய மறுமலர்ச்சி விழிப்புணர்வு ஒன்றியம்

அஸ்ரப் ஏ. சமத் இலங்கைவாழ் முஸ்லிம் சமூகத்தின் மன உணர்வுகளை புரிந்து கொண்டு தக்க தருனத்தில் பொருத்தமான முடிவை மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுதீனை முஸ்லிம் சமூகம் பாராட்டுகிறது என விடத்தல்தீவு இஸ்லாமிய விழிப்புணர்வு ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதியுடனும் அரசாங்கத்தின் உயர்மட்ட முக்கியஸ்தர்களுடனும் மிகவும் நெருக்கமான, வலுவான உறவைக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அதிகாரமிக்க அமைச்சு பதவியையும்…

Read More

ஜனாதிபதி தேர்தல்-2015: செய்தித் துனுக்குகள்

1. மன்னார் மாவட்டத்தின் ஜனாதிபதியின் தேர்தல் வேலைகளுக்காக அமைச்சர் றிசாத்பதியுத்தீன் நியமிக்க பட்டு இருந்தார். அவர் எதிரணிக்குச் சென்றதால், மன்னாரில் ஜனாதிபதி மஹிந்தவின் தேர்தல் பனிகளை கண்காணிப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் சிரேஸ்ட அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோவை ஜனாதிபதி மஹிந்தவின் தேர்தல் குழு நியமித்துள்ளது. 2. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, இன்று பி.பகல் தமிழ் பத்திரிகைகளில் விசேட பேட்டி ஒன்றை வழங்கினார். அதில் அமைச்சர் றிசாத்பதியுத்தீன் எதிர்தரப்பு சென்றமை பற்றியும் அதனைக் கண்டித்தும் வடக்கு முஸ்லீம்களை றிசாத்…

Read More

மத்தள விமான நிலையம் அமைக்க 27 பில்லியன் கடன், வருமானமோ மாதம் 16000 ரூபா – சம்பிக்க ரணவக்க

ஹம்பாந்தோட்டை மத்தள விமான நிலைய அமைப்புக்காக 27பில்லியன் ரூபாய்கள் கடனாக பெறப்பட்டுள்ளன. எனினும் அந்த விமான நிலையத்தின் மாத வருமானம் 16,000 ரூபாவாகும். இந்தநிலையில் குறித்த 27 பில்லியன் ரூபாய் கடனை செலுத்துவதற்கு 144, 000 வருடங்கள் பிடிக்கும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மனித குலம் பரிணாம வளர்ச்சி ஏற்படு;த்தப்பட்டு 143 வருடங்கள் கடந்துள்ளன இந்தநிலையில் மத்தள விமான நிலையத்தின் கடன்களை அடைப்பதற்கும் மனித குல பரிணாம வளர்ச்சியின்…

Read More

”வெள்ளை மாளிகை, பென்டகன் வீழ்த்தப்படும்” வடகொரியா

சோனி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மீதான சைபர் தாக்குதல் குற்றச்சாட்டு தொடர்பில் அமெரிக்காவுக்கு வட கொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதி எங்கும் தாக்குதல் நடத்தப்போவதாக வட கொரியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சோனி பிக்சர்ஸ் திரைப்பட தயா ரிப்பு நிறுவனத்தின் கணனி வலயமைப்பில் அத்துமீறி நுழைந்து செய்யப்பட்ட சைபர் தாக்குதலின் பின்னணியில் வடகொரியா இருப்பதாக அமெரிக்கா சுமத்தும் குற்றச்சாட்டை வடகொரியா தொடர்ந்து மறுத்து வருகிறது. இதற்கு எதிராக வட கொரியா வெளியிட்ட எச்சரிக்கை…

Read More

அனைத்து அரச ஊழியர்களும் மைத்திரிக்கே வாக்களியுங்கள்- றிசாத் பதியுதீன்

இந்த நாட்டில் நல்லாட்சி ஏற்படவும் ஜனநாயகம் வளரவும் முஸ்லிம் மக்கள் உட்பட அனைத்து மக்களினதும் பாதுகாப்பு, சுய கௌரவம் என்பனவற்றை கருத்திற் கொண்டு இன்று  (2014-12-23) இடம் பெறும் தபால் மூல வாக்களிப்பில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்கிளித்து அவரது வெற்றியை உறுதிப்படுத்துமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் Nதிசயத் தலைவர் ரிசாத் ;பதியுதீன் அரச ஊழியர்களிடத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.. இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது – இந்த நாட்டில் புரையோடிப்போயிருந்த இனப்…

Read More

மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பது ஏன்? றிஷாத் பதியுதீன் விளக்கம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிஷாத்பதியூதீன், மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக நேற்று அறிவித்துள்ளார். அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலியும் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக இதன்போது இணைந்து கொண்டமை குறிப்பிடக்கத்தது. ஒரு குடும்பமாக வாழ வேண்டிய இந்த சிறிய நாட்டில், பிரிவினையை ஏற்படுத்தி, பிரச்சினைகளை உருவாக்கியமையை நீங்கள் அறிவீர்கள். அந்த சந்தர்ப்பத்தில் அமைச்சரவை அமைச்சர் என்ற விதத்தில், ஜனாதிபதிக்கும், குறிப்பிட்ட பாதுகாப்பு பிரிவினரும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாம் தெளிவுப்படுத்தியிருந்தோம். அதனை நிறுத்துமாறும் நாம் கோரிக்கை…

Read More

இனி எனது பாதுகாப்பு உட்பட அனைத்தும் இறைவனிடம்தான் உள்ளன – றிஷாத் பதியுதீன்

ஏ.எச்.சித்தீக் காரியப்பர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்  ஆளுந்தரப்பிலிருந்து விலகி எதிரணி பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு தீர்மானித்து விட்டார். அதன்படி இன்று (22) எல்லாம் நடந்து முடிந்து விட்டன. தனது அமைச்சுப் பதவியையும் அவர் இராஜினாமா செய்து விட்டார். இவையெல்லாம் இன்று பகலுடன் நடந்து பரபரப்பு அடங்கிய நிலையில் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அப்போது அவர் என்னிடம் தெரிவித்த சில கருத்துகளை மனதை நெருடச் செய்தன. மிக சக்திமிக்க அமைச்சுப் பொறுப்பை ராஜினாமாச் செய்து விட்டேன்….

Read More