Headlines

இலங்கையில் பொதுவேட்பாளர் மைத்திரிபாலவின் செல்வாக்கு அதிகரிப்பு! கொழும்பு ஊடகம்

எதிரணிக்கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று காலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் இல்லத்தில் இடம்பெற்றது. இதன் போது பொதுவேட்பாளர் தரப்பில் மேற்கொள்ளப்படுகின்ற பிரசாரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதன் போது கடந்த மூன்று வாரங்கள் மைத்திரிபால சிறிசேன சார்பில் மேற்கொண்ட பிரசாரங்கள் மூலமாக அவர் பிரசித்தம் பெற்று வருவதாக தகவல் வெளியிடப்பட்டது. 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது சரத் பொன்சேகா மேற்கொண்ட பிரசாரங்கள் மூன்று வாரக்காலப்பகுதியில் சரிவடைந்து வந்தமை இந்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டப்பட்டது…

Read More

பாராளுமன்ற ஆசன வரிசைகளில் மாற்றம்; திஸ்ஸவுக்கு முன்வரிசை

பாராளு மன்றம் நேற்று பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தலைமையில் கூடியது. ஆளும் கட்சியிலிருந்து வெளியேறிய ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்க்கட்சி ஆசன வரிசையில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு ஆளும் தரப்பில் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆளும் கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மாத்திரமே நேற்று சபைக்கு வந்திருந்தனர். இந்த ஆசன ஒதுக்கீடுகளுக்கு அமைய ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலரின் ஆசனங்கள் மாறியிருந்தமையை அவதானிக்கக்கூடியதாக…

Read More

‘யாழ்ப்பாண முஸ்லீம்கள் ஜனாதிபதி தேர்தலில், எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்க மாட்டார்கள்”

யாழ் மாவட்ட முஸ்லீம் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்க மாட்டார்கள் என முன்னாள் யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனத்தின் தலைவரும் சமூக சேவகருமான கே.எம் நிலாம் தெரிவித்தார். தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிக்க தீர்மானம் எடுத்துள்ளனர் என வினவியபோது மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் கடந்த கால யுத்தத்தின் பின்னர் மீண்டும் மீளக்குடியமர்ந்த மக்களின் அடிப்படை தேவைகள் இன்னும் சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை.அவர்கள் வாழ்வதற்கு காணிகள்…

Read More

கிரான்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதலின் போது நான் தலையிட்டதால் மற்றுமொரு கறுப்பு ஜூலையை தடுக்கமுடிந்தது.பைஸர் முஸ்தபா

ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு பொதுபல சேனா  ஆதரவு வழங்கினால், நான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து விலகிடுவேன் என முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பாக தனது நிலைப்பாட்டை பொது பலசேனா இன்னமும் தெளிவாக அறிவிக்கவில்லை. அவ்வாறு பொதுபலசேனா  நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு வழங்கினால் நான் ஐக்கிய…

Read More

மஹிந்த ராஜபக்ஷவினால்தான் முஸ்லிம்களின் பாதுகாப்பும், நலன்களும் உத்தரவாதப்படுத்தப்படும் – அஸ்வர்

ஜனாதிபதி மஹிந்தராஜ பக்ஷவினால்தான் முஸ்லிம் களின் எதிர்கால பாதுகாப்பும், நலன்களும் தொடர்ந்தும் உத்தரவாதப்படுத்தப்படும். இதனை முஸ்லிம்கள் நன்கு உணர்ந்து உள்ளனர். மூன்றாவது முறையும் அவரை ஜனாதிபதியாக்க முஸ்லிம்கள் என்றோ முடிவெடுத்து விட்டார்கள் என்று ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார, தகவல் ஊடக சிரேஷ்ட ஆலோசகரான ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்துள்ளார்.

Read More

நாங்கள் மஹிந்த அண்ணா, என அழைத்தவரின் பயணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது – மைத்திரிபால சிரிசேன

2010ஆம் ஆண்டிற்குப் பின்னர், தற்போதைய ஜனாதிபதியின் பயணத்தில் மாற்றம் ஏற்பட்டதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். சிலாபம் மஹாவௌ பிரதேசத்தில் 12-12-2014 இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 2005ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது நாட்டின் பெரும்பாலான மக்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர். அந்த காலகட்டத்தில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிறப்பு வாய்ந்தவராக திகழ்ந்தார். நாங்கள் அந்த…

Read More

எனது வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் என்னில் சேறு பூச முயற்சிக்கின்றனர் –கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல் தவம்

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் எனது வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், நேற்று 11.12.2014) நடந்த கண்ணியத்துக்குரிய உலமாக்களுடனான சந்திப்பில் நான் கூறிய கருத்துக்களை கூட திரிபுபடுத்தி என்னில் சேறு பூச முயற்சிக்கின்றனர். நான் கூறியதாவது; “எதிர்காலத்தில் நாம் எத்தனை பேர் எம் பி யாகப் போகிறோம்?எத்தனை பேர் மாகாண சபை உறுப்பினராகப் போகிறோம்? கட்சி எத்தனை வாக்குகள் எடுக்கப் போகிறது? என்பவற்றை மட்டும் தான் மனதில் கொண்டு நாம் தீர்மானம் எடுக்கப்போகிறோமா? அதற்காகத்தான் இந்தக்…

Read More