சர்வதேச மனித உரிமைகள் தினம்
பழுலுல்லாஹ் பர்ஹான் மார்கழி பத்தாம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். இவ்வாண்டின் கருப்பொருளாக ‘மனித உரிமைகள்-365′ என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வருடத்தில் சகல நாட்களும் மனித உரிமைகள்தான். ஒரு நாட்டில் அனைவர்களுக்கும் சமமான உரிமைகளை அனுபவிக்கும் வாய்ப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படல் வேண்டும். மனித உரிமைகள் அரசாங்கங்கள் விரும்பியவாறு வழங்கும் கொடைகள் அல்ல. அரசாங்கங்கள் அவற்றை மறுக்கவோ ஒரு சிலர் விடயத்தில் பிரயோகித்து ஏனையோருக்கு மறுக்கவோ முடியாது. அவ்வாறு செய்தால் அதற்கு பொறுப்புக் கூறுதல் வேண்டும்….
