Headlines

மைத்திரிபால பொது வேட்பாளரானது சர்வதேச சதித்திட்டம்: பொதுபல சேனா

கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற அந்த அமைப்பின் கூட்டத்தில் அதன் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இதனை கூறியுள்ளார். போரில் வெற்றி பெற அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய தலைவருக்கு எதிராக 2010 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட சதித்திட்டம் இம்முறை முன்னெடுக்கப்படுகிறது.இன்று வைக்கப்பட்டுள்ள பொறியே அன்றும் வைக்கப்பட்டது.இதே எதிர்சக்திகள் அன்றும் செயற்பட்டன. நாட்டை வெற்றிபெற செய்த தலைவருக்கு அவரே கட்டளைகளை வழங்கிய இராணுவ  தலைவர் சரத் பொன்சேகாவை ஜனாதிபதி எதிரணி வேட்பாளராக மாற்றினார். போரை வென்ற…

Read More

ஆளும் கட்சியின் பலர் இரகசியமாக உதவுகின்றனர்!– ராஜித

சிவில் மற்றும் வெகுசன அமைப்புக்கள் பல பொது வேட்பாளருக்கு ஆதரவளித்து வருகின்றன. எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள விரும்பும் பலரை அரசாங்கம் பல்வேறு வரப்பிரசாதங்களை வழங்கி தக்க வைத்துக் கொள்ளும் பலவீனமான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த தோற்க வேண்டுமென்ற நோக்கில் பலர் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். அண்மையில் கட்சி காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வு ஒன்று நடத்திய போது பாதுகாப்பு படையினர் புகுந்து இடையூறு விளைவித்தனர். கட்சிக் காரியாலயத்தை கடுமையாக சோதனையிட்டனர். நாட்டின் பாதுகாப்பு குறித்து திருப்தி அடைய…

Read More

முஸ்லிம் பெண்களின் திருமண வயது 15 – குஜராத் நீதிமன்றம்!

முஸ்லீம் பெண்களின் திருமணவயது 15  என குஜராத் உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டு உள்ளது. 17 வயதான முஸ்லீம் இளம் பெண்ணை திருமணம் செய்தவர் மீது குழந்தைத் திருமண சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் குஜராத் உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்து உள்ளது. முஸ்லீம்களின் தனிச் சட்டத்தின் படி பெண்கள் பருவம் அடைந்து இருந்தாலோ அல்லது 15 வயது பூர்த்தி அடைந்து இருந்தாலோ பெற்றோரின் சம்மதம் இன்றியும் திருமணம் செய்து கொள்ளலாம். இந்நிலையில்…

Read More

சிறுபான்மை எமக்கு தேவையில்லை – அமைச்சர் மகிந்த யாப்பா

சிறுபான்மை மக்களின் வாக்குகளோ அல்லது ஆதரவோ எமது ஜனாதிபதிக்கு தேவையில்லை  என அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில், நிறைவேற்று அதிகாரத்தை கொண்டே யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்தோம். தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் ஈழ கனவை நனவாக்க கங்கணம் கட்டி கொண்டு இருக்கின்றது. வெளிநாட்டு சக்திகளும் ஊடுருவப்பார்க்கின்றது. இதற்கு உதாரணமே வட மாகாண சபையில் செங்கோல் வீசி எறியப்பட்டது. யுத்தம் முடிந்தாலும் பிரச்சினைகள்…

Read More

சொத்து விபரங்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையாளர், வேட்பாளர்களுக்கு உத்தரவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக 18 வேட்பாளர்களின் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார். கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களிடம் விசேட படிவமொன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தில் சொத்து விபரங்கள் பற்றிய விபரங்களை குறிப்பிட்டு மீளவும் தேர்தல் செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும். நாளை காலை 9 மணி முதல் நண்பகல் வரையில் வேட்பு மனுக்களை தேர்தல் செயலகத்தில் தாக்கல் செய்ய முடியும். இ;வ்வாறு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் போது சொத்து விபரங்களையும் வேட்பாளர்கள்…

Read More