Headlines

ஜனாதிபதி – ரிசாத் குழு விஷேட சந்திப்பு 08ஆம் திகதிக்குப் பிறகு இறுதி முடிவு

ஏ.எச்.எம்.பூமுதீன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அ.இ.ம.கா கட்சிக்குமிடையிலான விஷேட சந்திப்பு இன்று நன்பகல் அலரி மாளிகையில் இடம்பெறற்து. இச்சந்திப்பின் போது முஸ்லிம்களின் பாதுகாப்பு, இருப்பு ,வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் ,முஸ்லிம் சமுகத்தில் காணப்படும் காணிப்பிரச்சினை ,முஸ்லிம்களின் கல்வி மற்றும் தொழில் வாய்ப்பு போன்றவை குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஜனாதிபதியுடன் விரிவாக எடுத்துரைத்து கலந்துரையாடியுள்ளது. அ.இ.ம.கா வின் மேற்படி கோரிக்கைகள் தொடர்பில் கவனமாக செவிமடுத்தனர் ஜனாதிபதி தலைமையிலான…

Read More

வாக்குரிமை உள்ளவரா?; பரிசோதித்துப் பாருங்கள் இணையத்தில்

ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான  தகுதியைப் பெற்றுள்ளீர்களா என்பதை http://www.slelections.gov.lk/ID/index.aspx என்ற இணையத்தள முகவரியில் பார்வையிடலாம் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் வாக்களிக்கத் தகுதியானவரா? உங்கள் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? என்பதை இலகுவாக அறிந்துகொள்ள தேர்தல் திணைக்களம் புதிய யுக்தி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

Read More

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளராக அஷ்டொன் கார்ட்டெரை அறிவிக்கவுள்ள ஒபாமா

இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் ஒபாமா, அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகனின் முன்னால் பிரதித் தலைவரான அஷ்டொன் கார்ட்டெர் என்பவரைத் தமது புதிய பாதுகாப்புச் செயலாளராக அறிவிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இச்செய்தி உறுதியாகும் பட்சத்தில் கடந்த மாதம் பதவி விலகியிருந்த சக் ஹாகெலின் இடத்தை இவர் நிரப்புவார் என எதிர்பார்க்கப் படுகின்றது. அஷ்டொன் கார்ட்டெர் ஏற்கனவே ஆக்டோபர் 2011 முதல் டிசம்பர் 2013 வரை லெயொன் பனெட்டாவின் கீழ் பிரதிப் பாதுகாப்புச் செயலாளராகக் கடமையாற்றி இருந்தார்…

Read More

இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு!

டிசம்பர் 6ம் திகதியான இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சாதாரணமாகவே பாபர் மசூதி இடிப்பு தினம் என்றால் நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்புக்களும் தீவிரப்படுத்தப் பட்டிருக்கும். இப்போது ஏற்கனவே தீவிரவாத அச்சுறுத்தலில் உள்ள பிரதமராக நரேந்திர மோடி உள்ளதால், டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வரலாறு காணாத வகையில் அதிகப்படுத்தப் பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியின் முக்கிய…

Read More

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட, இலங்கையருக்கு மன்னிப்பு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் சாரதியாக பணியாற்றி வந்த இந்த இலங்கை பிரஜைகளின் வாகனத்தில் விபத்துக்குள்ளாகி அந்நாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்தவரின் தந்தை இலங்கை பிரஜையிடம் இழப்பீட்டை பெற்றுக்கு மன்னிப்பு வழங்கினார். இதனையடுத்து அவர் மரண தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டார். உயிரிழந்தவரின் தந்தைக்கு மூன்று லட்சம் ரியால்களை இழப்பீடாக வழங்குமாறு இலங்கை பிரஜைக்கு…

Read More

முஸ்லிம்களும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளனர் – மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அமைக்கப்படும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் ஒன்றே சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து ஆராயும் என்று இலங்கையின் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிபிசிக்கான பிரத்தியேக செவ்வி ஒன்றிலேயே இந்தக் கருத்தை அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் போர் முடிவுக்கு வந்துவிட்டாலும், தமிழர்களின் பிரச்சினை இன்னமும் தீரவில்லை என்றும் அதேவேளை முஸ்லிம்களும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளதாகவும் கூறி, இந்த சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான பொதுவேட்பாளரின் திட்டம் என்ன…

Read More