Headlines

அ.இ.ம.கா உயர்பீடக் கூட்டம் 10 மணிக்கு! ஜனாதிபதியுடனான சந்திப்பு நண்பகல் 12க்கு!!

ஏ.எச்.எம்.பூமுதீன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்குமிடையிலான விஷேட சந்திப்பு நாளை நன்பகல் 12 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி;த் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும்  நிலையில் இது முக்கியத்துவமான சந்திப்பு என தெரிவிக்கப்படுகின்றது. முஸ்லிம்களின் இருப்பு ,கௌரவம் மற்றும் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதியுடனான இச்சந்திப்பின்போது விரிவாக ஆராயப்படவுள்ளது. ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு முன்பதாக ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அவசர உயர்பீட கூட்டம் நாளை காலை 10 மணிக்கு அமைச்சர் ரிசாத்…

Read More

தண்ணீரில் இருந்து எரிபொருள் தயாரிக்கலாம்: விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு

ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய வாயுக்கள் ஒன்று சேர்ந்து உருவானதுதான் தண்ணீர். எனவே தண்ணீரில் ஏராளமான ஹைட்ரஜன் உள்ளது. ஹைட்ரஜன் சக்தி வாய்ந்த எரிபொருள் ஆகும். ஆனால் தண்ணீரில் இருந்து அதை பிரித்தெடுப்பது மிகவும் கடினம். ஆனால் தண்ணீரில் இருந்து எளிதாக ஹைட்ரஜனை உருவாக்க முடியும் என்று ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் உள்ள தேசிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்திய வம்சாவளியை சேர்ந்த கஸ்தூரி கிங்கோரனி உள்ளிட்ட விஞ்ஞானிகள் குழு இது சம்மந்தமாக ஆய்வு மேற்கொண்டது. அதில் தாவரங்களில் ஒளிச்சேர்க்கை…

Read More

பூமிக்கடியில் புதைந்த 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாளிகை: லண்டன் தொல்லியல் துறை கண்டுபிடிப்பு

தெற்கு இங்கிலாந்தைச் சேர்ந்த தொல்லியல் துறையினர் இதுவரை கண்டுபிடிக்காத அளவில் மிகப்பெரிய மாளிகையை லண்டனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்ககோட்டைக்குள் கண்டுபிடித்துள்ளனர்.கோட்டையின் புல் தளத்திற்கு கீழே காணப்பட்ட இந்த மாளிகை 700 வருடத்துக்கும் மேலாக மண்ணில் புதைந்திருக்கலாம் என்றும், வலுவான இந்த மாளிகையின் உள் மற்றும் வெளித்தோற்றம் ரோமானிய அரசின் உலோகக் காலத்தில் கட்டப்பட்டிருப்பதாகவும் தொல்லியல் துறையினர் கருத்து தெரிவித்தனர் பிரதேசவியல் மற்றும் புவிஇயற்பியல் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அந்த மாளிகையின் உட்புற மற்றும் வெளிப்புற முற்றங்களை தொல்லியல்துறையினர்ஆராய்ந்தனர்….

Read More

இஸ்ரேலில் மார்ச் 17-ம் தேதி பாராளுமன்றத் தேர்தல்

இஸ்ரேலில் வரும் மார்ச் 17-ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.இஸ்ரேலில் ஆளும் கூட்டணி கட்சிகளுக்கிடையே மோதல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை நடத்தலாம் என்ற செய்தி வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக அமைச்சரவைக் கூட்டத்திலும் தனது அதிருப்தியை பிரதமர் வெளிப்படுத்தினார். இதுதவிர இரண்டு அமைச்சர்கள், பிரதமரின் கொள்கைகளை வெளிப்படையாக விமர்சித்து வந்தனர். ஆட்சியில் இருந்துகொண்டே இவ்வாறு விமர்சிப்பதால் பிரதமர் கடும் அதிருப்தி அடைந்தார்….

Read More

மாதம் 2 கோடி சம்பளம் பெறும் ஏழை முஸ்லிம் தொழிலாளியின் மகன்

ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டம் போரூர் கிராமத்தை சேர்ந்தவர் சேக் ஜமாலுதீன். இவரது மனைவி ரகீமா பேகம். இவர்களுக்கு 2 மகள்களும், நசீர்பாபா என்ற மகனும் உள்ளனர். சேக் ஜமாலுதீன் கிரானைட் கம்பெனி ஒன்றில் கூலித்தொழிலாளியாக வேலை பார்க்கிறார். மாதம் ரூபாய் 5 ஆயிரம் தான் வருமானம் பெற்றார். குடும்பத்தை காப்பாற்ற இந்த வருமானம் பற்றாக்குறையாக இருந்ததால் மனைவி தையல் வேலையில் ஈடுபட்டு குடும்பத்தை நடத்தி வந்தார். இவர்களது மகன் நசீர்பாபாவுக்கு படிப்பு மீது மிகுந்த ஆர்வம்…

Read More

மஹிந்தவை ஜனாதிபதியாக ஆமோதிப்பதற்கு எனக்குத்தான் முதலில் சர்ந்தப்பம் வழங்கப்பட்டது: சிரேஸ்ட அமைச்சர் பௌசி

அஸ்ரப் ஏ. சமத் ‘ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இம்முறை ஜனாதிபதியாக வருவதற்கு வேற்பாளராக ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சி சார்பாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பிரேரித்தார். நான் அதனை ஆமோதித்தேன். அதற்காக முஸ்லீம்கள் சந்தோசப்படல் வேண்டும். நான் ஓரு முஸ்லீம். மஹிந்தவை கட்சியில் ஆமோதிப்பதற்கு எனக்குத்தான் முதலில் சர்ந்தப்பம் வழங்கப்பட்டது’ என சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்தார். நேற்று மருதானை சங்கராஜமாவத்தையில் உள்ள தொடர்மாடி வீடமைப்புத்திட்டத்தினை 850 இலட்சம் ரூபா செலவில் நவீனமயப்படுத்தி திறந்து வைக்கும்…

Read More

திருட்டுப்போன ராஜிதவின் கோப்புக்கள்

பேருவளை, ஹெட்டிமுல்லை பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவின் வீட்டிற்குள் திருடர்கள் புகுந்துள்ளதாகத் தெரியவருகிறது. போதைப் பொருளுக்கு அடிமையான ஒரு திருட்டுக் கும்பல் இந்த திருட்டை மேற்கொண்டிருக்கலாம் எனவும், அவர்கள் 5 கோப்புகள், 5 குறுந்தகடுகள், ஐ.பேட் கணிப்பொறி, மடிகணணி என்பவற்றை திருடிச் சென்றுள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். குறித்த வீட்டில் ராஜித சேனரத்ன அவ்வப்போது வந்து தங்கிசெல்வதாகவும், இதனை நன்கு அவதானித்த இந்த திருட்டு கும்பல் வீட்டின் பின்புற ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்நுளைந்துள்ளதாக…

Read More

அகதிகளுக்கான தற்காலிக வீசா வழங்கப் போகிறது அவுஸ்திரேலியா

அகதிகளுக்கு தற்காலிக விஸா வழங்குவதற்கு அவுஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான திருத்தச் சட்டம் நேற்று செனட் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதற்கு ஆதரவாக 34 வாக்குகளும், எதிராக 32 வாக்குகளும் கிடைத்தன. எனவே புதிய விதிகளின்படி தஞ்சம் கோரும் அகதிகள் 3 தொடக்கம் 5 வருடங்கள் வரை ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க முடியும். அத்துடன் இவர்கள் தொழில் நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியும். அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச் சென்று பப்புவாநியூகினி, நவ்றூ தீவுகளில் தங்க வைக்கப்பட்டுள்ள பல நூற்றுக்கணக்கான…

Read More

பாதுகாப்பு குறித்து ஆராய வந்தது வத்திக்கான் குழு

மடு தேவாலயத்திற்கு வருகை தரும் பாப்பரசர் முதலாம் பிரான்சினுடைய பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வதற்காக வத்திக்கான் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் இன்று மடுவிற்கு விஜயம் மேற்கொண்டு நிலமைகளை நேரில் ஆராய்ந்தனர். ஜனவரி மாதம் 13ஆம் திகதி இலங்கை வரவிருக்கும் பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் 14ஆம் திகதி மடுவுக்கு வருகைதரவுள்ளார். வருகை தருவதுடன் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கவுள்ளதுடன் மடு மாதா திருச்சொரூப ஆசீர்வாதத்தை மேற்கொள்ளும் பரிசுத்த பாப்பரசர் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் விசேட ஆசீர்வாதமும் வழங்கவுள்ளார். இதற்கான பாதுகாப்பு தொடர்பாக…

Read More

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரக் களம் சூடு பிடிக்கிறது; எதிரணி 140 கூட்டங்களை நடத்துகிறது!

ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் சார்பில் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து எதிரணியின் பிரச்சாரக்குழு 140 பிரதான கூட்டங்களை நடத்தத் தீர்மானித்துள்ளது. இந்தக் கூட்டங்களில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர். அத்தோடு, கிராமிய மட்டங்களில் 12 ஆயிரம் சிறிய கூட்டங்களை நடத்துவதற்கும்…

Read More

மஹிந்தவின் பதாதைகளை அகற்ற தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவு

டிசம்பர் 8ஆம் திகதியன்று வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே, இவ்வாறான பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுவதற்கு தேர்தல் ஆணையாருக்கு அதிகாரம் உள்ளது. எனினும் தற்போதே ஆணையாளர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். சுவரொட்டிகளை அகற்றுமாறு கொழும்பு மாநகர சபைக்கும் ஆணையாளர் பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த சுவரொட்டிகளை அகற்றுவதற்கு உள்ளுர் நிர்வாகங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படடுள்ளதாக ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்த எச்சரிக்கையை அடுத்து கொழும்பு மாநகர எல்லைக்குள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பதாதைகள் மற்றும்…

Read More

ராஜித சேனாரட்னவின் வீட்டில் கொள்ளை

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவின் வீட்டில் கொள்ளையிடப்பட்டுள்ளது. பேருவளை ஹெட்டிமுல்லவில் அமைந்துள்ள வீட்டில் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது. ஒரு லட்ச ரூபாவிற்கு அதிகமான பொருட்கள் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளன. சில கோவைகள், ஐ-பாட், மடிக்கணனி உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. அநேகமான நேரங்களில் இந்த வீட்டில் எவரும் இருப்பதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Read More