Headlines

முல்லை. நீரா யூத் அமைப்பு- அமைச்சர் றிஷாத் சந்திப்பு

முஹம்மட் ரிபாக் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்குற்பட்ட நீரா யூத் கிளப் அமைப்பினருக்கும்;, கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சருக்குமிடையிலான விஷேட சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு நீராவிப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாக விஷேட கலந்துரையாடலொன்றுக்கு அமைச்சர் வருகை தந்தபோதே குறித்த இளைஞர் அமைப்பினர் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் குடிசைக் கைத்தொழில் அபிவிருத்தி திட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச இணைப்பாளர் ஏ.ஜி.சிப்ரியின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்டத்தின்…

Read More

மருதமுனையைச் சேர்ந்த சஞ்ஜித் சட்டக்கல்லூரிக்கு தெரிவு

ஏ.எச்.எம். பூமுதீன் 2015 சட்டக்கல்லூரி அனுமதிக்கான போட்டிப் பரீட்சையில் மருதமுனையைச் சேர்ந்த சஞ்ஜித் அகமட் சித்தியைடைந்துள்ளார். மருதமுனையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் மூத்த ஆசான்களில் ஒருவருமான எம்.எச் காதர் இப்ராஹிமின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்து. கல்முனை மாநாகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஏ.எம் ரகீபின் மைத்துனரும் ஆவார்

Read More

5 ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை

இந்த வருடத்திற்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை எதிர்வரும் 5 ஆம் திகதி வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, சிங்கள, தமிழ் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் மூன்றாம் தவணை விடுமுறைக்காக 5ம் திகதி மூடப்படும் எனவும் 2015 ஆம் ஆண்டு முதல் தவணைக்காக பாடசாலைகள் ஜனவரி 5 ஆம் திகதி திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் தவணை ஏப்ரல் 8 ஆம் திகதிவரை இடம்பெறும். முஸ்லிம் பாடசாலைகள்…

Read More

தேசிய அரசில் இணையுமாறு மஹிந்தவுக்கு பகிரங்க அழைப்பு

அமையப்போகும் தேசிய அரசில் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்தவுக்கு நேற்று முன்னாள் அமைச்சரும், ஜாதிக யஹல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க அழைப்பு விடுத்தார். “தேசிய நோக்கத்திற்காக ஸ்தாபிக்கப்படவுள்ள இப்புதிய அரசில் இணைந்துகொள்வதற்காக பல பிரதானக் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன. ஆகவே, ஜனாதிபதி மஹிந்த­வும் அவருடைய ஆதரவாளர்களும் இதில் ஒரு பங்காளியாக இணைந்து கொள்ளுமாறு நாம் அழைப்பு விடுக்கிறோம்”  என சம்பிக்க மேலும் தெரிவித்தார். அத்தோடு, யுத்தக் குற்றச்சாட்டுகளை தாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும்…

Read More

சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் – இன்று

உலகலாவிய ரீதியில் டிசம்பர் 3 ஆம் திகதி சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளை புரிந்து கொண்டு, அவர்களுக்கான உரிமைகளை வழங்க வலியுறுத்தியும் ஐ.நா சார்பில் 1992 ஆம் ஆண்டு தொடக்கம் இந்தத் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Read More

பந்துல நாட்டை விட்டு வெளியேற ஆயத்தம்?

ஜனாதிபதி தேர்தலில் மகிந்த போட்டியிடும் இந்த சந்தர்ப்பத்தில் தேர்தல் குழுவின் முக்கியஸ்தரான அமைச்சர் பந்தல குணவர்த்தன திடீரென வெளிநாட்டு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அரசின் முக்கிய அமைச்சர்கள் குழப்பத்தில் இருப்பதுடன் இவரின் விஜயத்தை ஒத்திவைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அமைச்சரின் வெளிநாட்டு விஜயம் எதற்கானது என்பது தொடர்பாக இதுவரை தெரியவரவில்லை. (ஒ)

Read More

மைத்திரிபால சிறிசேன ராஜபக்‌ச படையணியை விரட்டுவார்; ரணில் விக்கிரமசிங்க

ராஜபக்‌ச படையணியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர மைத்திரிபால சிறிசேனவை நாம் பொது வேட்பாளராகக் களமிறக்கிப் போராட்டம் செய்கின்றோம், என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கெளதம புத்தர் சமாதானமாக ஒன்று கூடுங்கள், சமாதானமாகப் பேசுங்கள், சமாதானமாகக் கலைந்து செல்லுங்கள் எனப் போதனை செய்தார். ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச தலைமையிலான அரசினர் தனியாக ஒன்றுகூடி; தனியாகப் பேசி; தனியாக முடிவெடுக்கின்றனர். உலகில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உள்ள நாடுகளில் 2 தடவைக்கு…

Read More

அலரி மாளிகையின் தேர்தல் பிரச்சாரப் பொறிமுறைமையில் வீழ்ச்சி!– மைத்திரிபால

அலரி மாளிகையில் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்குப் பொறுப்பாக செயற்பட்டு வரும் அதிகாரிகள் ஒவ்வொருவராக விலகிச் செல்கின்றனர். அரசாங்கத்திலிருந்து நான் விலகியதனைத் தொடர்ந்து பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. ஆளும் கட்சி என்னுடைய இழப்பினை தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த காலங்களைப் போன்று வலுவான ஓர் தேர்தல் பிரச்சாரப் பொறிமுறைமயை காண முடியவில்லை என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More

சர்வதிகாரத்திற்கான பாதை மூடப்படுகின்ற, நேரம்வந்துவிட்டது – ரணில் விக்ரமசிங்க

மக்களுக்கு பெற்று கொள்ள முடியாது போன சகல வெற்றிகளையும், கிடைக்க பெற செய்வதே தமது நோக்கம் என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கும் வகையில் பிரஜைகள் சக்தி அமைப்பு ஒழுங்கு செய்த ஒன்றிணைந்த மக்கள் சந்திப்பு கொழும்பில் இடம் பெற்றது. அந்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் தினங்களில் தமது கொள்கை பிரகடனத்தை வெளியிடவுள்ளதாக தெரிவித்தார். இந்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய…

Read More

தேசிய சங்க சபை முன்வைத்த 15 கோரிக்கைகளை மைத்திரிபால ஏற்றுக்கொண்டார்

இலங்கையின் பௌத்த மக்களிடையில் செல்வாக்கு பெற்றுள்ள தேசிய சங்க சபை, பொது வேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்தல், சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்தல் உட்பட்ட பல விடயங்கள் தொடர்பில் அந்த சங்கம் நேற்று மைத்திரிபாலவுடன் உடன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன்போது சங்க சபையின் பொதுசெயலாளர் வண. பஹியங்கல ஆனந்தசாகர தேரர் முன்வைத்த 15 அம்சக் கோரிக்கையை மைத்திரிபால ஏற்றுக்கொண்டார்.. இதனையடுத்து கருத்துரைத்த தேரர், தாம் மைத்திரிபாலவின் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Read More

நான் வெற்றிபெற்றால் ஜனாதிபதி மாளிகைக்கு செல்லமாட்டேன் – மைத்திரி

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்திற்குக் கூட செல்ல மாட்டேன் என்று, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று 2/12/2014 கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். தான் பதவிக்கு வந்த பின்பு நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படுமா என்று பலர் கேள்விகளை எழுப்பி வருவது குறித்து குறிப்பிட்ட அவர், நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். நான் தேர்தலில் வெற்றி பெற்றால்…

Read More

கொழும்பில் ஐக்கிய அரபு இராட்சியத்தின் 43வது தேசிய தின விழா நிகழ்வுகள்

ஏ.எஸ்.எம்.ஜாவித் ஐக்கிய அரபு இராட்சியத்தின் 43வது தேசிய தினத்தை முன்னிட்டு இலங்கையில் உள்ள ஐக்கிய இராட்சிய தூதரகத்தின் ஏற்பாட்டில் தேசிய தின நிகழ்வினை கொழும்பு கில்ட்டன் ஹோட்டலில் தூதரகத்தின் தூதுவர் அப்துல் ஹமீட் ஏ.கே.எச். அல்முல்லா தலைமையில் இன்று (02) மாலை இடம் பெற்றது. இதன்போது தேசிய தினத்தை கொண்டாடு முகமாக தூதுவர் மற்றும் பிரதம அதிதியின் உரைகளைத் தொடர்ந்து பிரதம அதிதி அமைச்சர் டிலான் பெரேரா, தூதுவர் அப்துல் ஹமீட் ஏ.கே.எச். அல்முல்லா மற்றும் முன்னாள்…

Read More