Headlines

முசலிப் பிரதேசத்து மக்கள் ஹூனைஸ் எம்.பி க்கு விரைவில் பாடம் புகட்டுவர்! முசலி அ.இ.ம.கா உறுப்பினர்கள் கூட்டறிக்கை

ஏ.எச்.எம்.பூமுதீன் எதிரிகளை மன்னித்தாலும் துரோகிகளை ஒரு போதும் மன்னிக்க முடியாது என தெரிவித்துள்ள முசலி பிரதேச சபை தலைவர்  எஹ்யா , பிரதித் தலைவர் பைறுஸ் மற்றும் உறுப்பினர்களான அப்துல் ரஹ்மான் ,சுபியான் ,காமில் ,சுல்பிகார் போன்ற  சபையின் 06 அ.இ.ம.கா உறுப்பினர்களும் ஹூனைஸ் எம்பி , முசலி மக்களுக்கும் வன்னி முஸ்லிம்களுக்கும் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் செய்த துரோகத்தனத்திற்கு முசலி மக்கள் விரைவில் சிறந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் சுட்டிக் காட்டியுள்ளனர். இது தொடர்பில் முசலி பிரதேச…

Read More

மஹிந்த அரசிலிருந்து மேலும் 50 வீதமானோர் வெளியேறுவர்

எதிர்வரும் சில தினங்களில் அரசிலி ருந்த மேலும் 50 வீதமானோர் வெளி யேறவுள்ளதாக நேற்று முன்தினம் அரசிலிருந்து வெளியேறி ஐக்கியத் தேசியக் கட்சிக்குள் இணைந்து கொண்ட அரச முகாமைத்துவ மற்றும் மறுசீரமைப்பு முன்னாள் அமைச்ச ரான நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். அத்தோடு, “”அரசிடம் என் சம்பந்தப் பட்ட “பைல்கள்’ (ஆவணங்கள்) இருக் குமானால் 24 மணித்தியாலங்களி லேயே அதனை வெளியிட வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அரசிலிருந்து வெளியேறிய நுவ ரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப் பினரான…

Read More

கொடூரமான ஆட்சிக்கு முடிவுகட்டுமாறு நாட்டு மக்களுக்கு சந்திரிகா அழைப்பு

மனிதர்களைக் கொலை செய்யும் கொடூரமான அரசின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டை மீட்டெடுக்கும் போராட்டத்தை ஆரம்பித்துள் ளோம். எமது இந்தப் போராட் டத்துக்கு அனைவரும் ஆதர வளிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்தி ரிகா குமாரதுங்க நேற்று அழைப்பு விடுத்தார். அத்துடன், பொதுவேட்பாளராகக் களமிறங்கியுள்ள மைத்திரிபால சிறி சேன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து ஜனநாயகத்தை நிலைநாட்டுவார் என நான் உறுதியளிக்கிறேன் என்றும் தெரிவித்தார். கொழும்பு – 07 விகாரமஹாதேவி பூங்காவில் நேற்று…

Read More

மைத்திரிக்கு ஆதரவு வழங்கும் ஜாதிக ஹெல உறுமய

ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்க ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர், பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். குறித்த கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசில் பங்காளியாக இருந்து வெளியேறியுள்ள நிலையில் கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதேவேளை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, நல்லாட்சி, அரசியல் யாப்பு மாற்றம் போன்றவற்றை ஜாதிக ஹெல…

Read More

மஹிந்தவின் கடையி மூடிவிடுவோம்; அனுரகுமார திஸாநாயக்க

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடையை மூட வேண்டிய காலம் உருவாகியுள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மகிந்தவின் கடையில் காலாவதியான பொருள்களே விற்பனையாகின்றன. அவற்றின் விலைகளும் அதிகமானது. அதை விட அதில் காணப்படும் இனிப்புக்களுக்குள் விஷமுண்டு. அதனால் ராஜபக்சவின் கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்போம். அதன் பின்னர், மைத்திரிபால வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றிக்கொள்ள தொடர்ந்தும் போராடுவோம். மஹிந்தவின் கடையை மூடுவது சுலபமானதல்ல. சர்வாதிகார ஆட்சி முறைமையை முடிக்குக் கொண்டு வர வேண்டும்….

Read More

எனது அரசில் குறைகள் உண்டு; மஹிந்த

ஆட்சியிலுள்ள அரசில் குறைகள் எதுவும் இல்லை என நான் குறிப்பிடவில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் வாழ்ந்து வந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள், கப்பம் பெற்றுக்கொள்ளும் நபர்கள் தற்போது வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். ஊடகவியலாளர்களில் 70 வீதமானவர்கள் அரசிற்கு விரோதமான வகையிலேயே இவர்கள் தகவல்களை வெளியிடுகின்றனர். (o) நீதிமன்றின் நடவடிக்கைகளுக்கு எல்லா சந்தர்ப்பத்திலும் தலை வணங்குகின்றேன். இந்த அரசு குறைபாடுகள் இல்லாமல் இல்லை. போதைப் பொருள் காணப்படுகின்றது அவற்றை நாம் பிடிக்கின்றோம். இவற்றை பத்திரிகைகளில் பிரசூரித்து…

Read More

சீன அபிவிருத்தி தொடர்பான மோசடி அம்பலப்படுத்தப்படும் -நவீன்

சீன அபிவிருத்தி தொடர்பான மோசடிகள் குறித்து அம்பலப்படுத்த உள்ளதாக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை அரசு சீனாவுடன் இணைந்து அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் இதில் பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளில் ஈடுபடாத ஒர் ஜனாதிபதியையே நாடு எதிர்பார்க்கின்றது எனவும், அதற்கு மைத்திரிபால சிறிசேன பொருத்தமானவர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (O)

Read More

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் 7ஆம் திகதி வரை ஏற்பு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை எதிர்வரும் 7ம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, பதிவு செய்த அரசியல் கட்சியொன்றிடமிருந்து 50 ஆயிரம் ரூபாவும், சுயேட்சை வேட்பாளர் ஒருவரிடமிருந்து 75 ஆயிரம் ரூபாவும் கட்டுப்பணமாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

Read More

தனக்கு கிடைத்த சர்வதேச விருதை, முஸ்லிம் சகோதரிக்கு வழங்கிய மைத்திரியின் தாராள மனசு..!

(Rizvi Jawharsha) மைத்ரீ ஒரு பதிவு..! சில மாதங்களுக்கு முன்னர்…! சுகாதார அமைச்சரின் அலுவலகத்திலிருந்து அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு ஒரு அழைப்பு. ஒரு விஷேட வைபவம் குறித்த இடதிட்கு குறித்த நேரத்த்திட்கு வருமாறு அந்த அழைப்பு சுகாதார அமைச்சர் மைத்ரீ இடம் இருந்து. அனைவரும் வந்து சேர்ந்தனர். என்ன நிகழ்வு? ஏன் அழைக்கப்பட்டோம் ?அதிகாரிகள் ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டனர். அமைச்சரின் தொலைப்‌பேசியில் இருந்து அமைச்சின் சிரேஷ்ட சட்ட ஆலோசகர் திருமதி Ahamed க்கு ஒரு அழைப்பு “வைபவத்திக்கு…

Read More

ஐ.தே.க.யில் இணைந்த நவீனுக்கு வந்துகுவியும் பேஸ்புக் வாழ்த்துக்கள்..!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தமை தொடர்பில் கடந்த 24 மணிநேரத்தில் தனது பேஸ்புக் கணக்கில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழ்த்துக்கள் கிடைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று 01/12/2014 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மீண்டும் எனது அரசியல் தாய் வீட்டுக்கு வந்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். நுவரெலியா மாவட்டத்திற்கு தேவையான வசதிகளை…

Read More

க.பொ.த.சாதரத்தில் 9ஏ எடுத்த 265 முஸ்லிம் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு (photos)

அஸ்ரப் ஏ சமத் இலங்கை ஒலிபரப்புக் முஸ்லீம் சேவையின் ஆலோசகர் அகமத் முனவர் மற்றும் அவரது முஸ்லீம் கல்வி முற்போக்குச் சங்கத்தினால் 7ஆவது ஆண்டாக நாட்டின் நாலா பாகத்திலிருந்தும் 2013ஆம் ஆண்டில் க.பொ.த.சாதரத்தில் 9ஏ எடுத்த 265 முஸ்லீம் மாணவர்களுக்கு ருபா 9ஆயிரம் ருபா பணமும் சான்றிதழ், பாடசாலை உபகரணப் பொதிகள், பதக்கம் அணிவித்து கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ( 30/11/2014) கொழும்பு சாஹிராக் கல்லூரியில் நடைபெற்றது. பிரதம அதிதியாக பேராசிரியர் றிஸ்வி சரீப், அமைச்சர் றிஷாத் பதியுதீன்…

Read More

அனைத்து முஸ்லிம் தலைவர்களும் மைத்ரியுடன் இணைய வேண்டும் – ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுகைர்

அஷ்ரப் ஏ சமத் இந்த நாட்டின் ஜனாதிபதியின் அரசில் இருக்கின்ற சகல முஸ்லீம் தலைவர்களும் விலகி பொதுஆபேட்சகர் மைத்திரிபாலசிறிசேனவுடன் இணைந்து கொள்ளல் வேண்டும். ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுகைர். வேண்டுகோள் இன்று 35 கட்சிகள் ;இணைந்து கொழும்பு விகாரமாகதேவி உள்ளக அரங்கில் கைச்சாத்திட்ட நிகழ்வில் ஜனாப் சுகையிர் கலந்து கொண்டிருந்தார். இந் நிகழ்வில் முன்னாள் முஸ்லீம் காங்கிரசின் எம்.பியும் ;ஈராண் நாட்டின் தூதுவராகவும் ருபாவாஹினி தலைவராகவும் கடமையாற்றியவர். எம்.எம். சுகையிர் விசேட போட்டியொன்றிலே மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார்-…

Read More