Headlines

ஜனாதிபதிக்கு ஆதரவில்லை சனி மாற்றமும் நல்லதுக்கில்லை

ஜனாதிபதித் தேர்தலில் அரச தரப்புக்கு ஆதரவ ளிக்கப்போவதில்லை என்றும், மஹிந்த ராஜபக்­வின் கொள்கைகளை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் ஜாதிக ஹெல உறுமயவின் தவிசாளர் அத்துரெலிய ரத்தன தேரர் கூறினார். தேசிய நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தி யாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார். “அமைச்சுப் பதவிகளைத் துறந்து அரசுக்கு தெளிவானதொரு பதில் வழங்கப்பட்டுள்ளது. எனவே, நாட்டில் அரசமைப்பு மாற்றப்பட வேண்டும். நிறைவேற்று ஜனாதி பதி முறைமையில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்….

Read More

பூனைக்கு மணி கட்டிவிட்டோம் எலிகள் விழிப்பாக இருந்தால் சரி

“பூனையிடம் இருந்து தப்பிப்பதற்கு அதன் கழுத்தில் மணிகட்டுவதே சிறந்த வழியயன எலிகள் முடிவெடுத்தன. இதன்படி, மணியைக் கட்டுவதற்கு அவை தயாராகின. இந்த திட்டத்துக்கு அமைய ஒரு எலி பூனையில் கழுத்தில் மணி கட்டியது. ஆனால், பூனை ” மீயா’ என்றதும் ஏனைய எலிகள் ஓடிவிட்டன. இந்நிலைமையே இன்று ஹெல உறுமயவுக்கு ஏற்பட்டுள்ளது. எனினும், நாம் பின்வாங்கமாட்டோம். கொள்கைத் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக போராடுவோம். வெளியில் இருந்தாவது நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்” இவ்வாறு தெரிவித்தார் ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிப்…

Read More

இனி எம்மை கொலைகாரர் என்பார்கள்; எதற்கும் தயங்கோம்

ஹெல உறுமய உறுப்பினர்களுக்கு எதிராக இனி பல கோணங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப் படலாம். கொலைகாரர்கள் என்றும், கொள்ளைக்காரர்கள் என்றும்கூட குறிப்பிடலாம். ஆனால், நாம் ஒருபோதும் வளைந்து கொடுக்க மாட்டோம்.பிரபாகரனுக்கே அடி பணியாத நாம் இவ்வாறான அழுத்தங்களைக்கண்டு அஞ்சப்போவதில்லை . சிங்கள மக்களுக்காக நாம்தான் குரல் எழுப்பிவரு கின்றோம். மாவிலாறு முதல் அளுத்கமவரை எமது குரல் ஓங்கி ஒலித்தது. இன்று இந்த அரசிலுள்ள சிலர் மோசடிகளில் ஈடுபடுகின்றனர். அதிகாரிகள் சிலர் தான்தோன்றித்தனமாகச் செயற் படுகின்றனர். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை…

Read More

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதம் வெளியாகிறது

கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பெறுபேறுகளை ஒழுங்குப்படுத்தும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். உயர் தரப் பரீட்சையில் 2,34,197 பாடசாலை பரீட்சார்த்திகளும், 62,134 தனியார் பரீட்சார்த்திகளும் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read More

அவசரமாகக் கூடும் அமைச்சரவை!

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டமொன்று நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மதியம் இந்த அவசர அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் இன்று நள்ளிரவு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் எதிர்வரும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி 3ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறலாம் என தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து அமைச்சர்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாகக்…

Read More

உதய கமன்பிலவின் டுவிட்…….!

ஹெல உறுமயவின் மேல்மாகாண சபை உறுப்பினர் உதயகமன்பில  தனது ராஜினாமா கடிதத்தை சமூக ஊடகத்தில் வெளியிட்டார். தனது ராஜினாமாவை ஊடகங்களுக்கு அறிவித்த கமன்பில அக் கடிதத்தை டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.ன்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

பொது வேட்பாளருக்கு ரணில் விக்ரமசிங்கவே தகுதியானவர் – சரத் பொன்சேகா

பொது வேட்பாளராக போட்டியிட மிகவும் தகுதியானவர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கட்சிக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது உள்ள அரசியல் தலைவர்களில் ரணில் விக்ரமசிங்க அனுபவ முதிர்ச்சியுடையவர். ரணில், அனுபவமும் திறமையும் உடையவர். ரணில் பொருத்தமற்றவர் என சிலர் குறிப்பிடுகின்ற போதிலும், என்னை பொறுத்தவரையில் ரணில் போட்டியிடுவதில் பிரச்சினையில்லை. பொது வேட்பாளர் அனுபவமும்,  எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர்…

Read More

உயிரிழந்தவர்களை நினைவுகூர முடியாத நிலையில் தமிழினம்

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தீபச்சுடரினைக்கூட ஏற்ற முடியாத நிலையில்தான் எம்மினம் இந்த நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். இந்த நாட்டின் ஜனாதிபதியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக வடகிழக்கில் உள்ள பிரதேச செயலகங்களூடாக ஆலயங்களில் பூசை செய்யுமாறு ஜனாதிபதியினால் பணிப்புரை விடுக்கப்பட்டு, அவரது பிறந்தநாளான இன்று ஆலயங்களில் விசேட பூசையும் இடம்பெற்றுள்ளது. இவரது பிறந்தநாளன்று கட்டாயமாக ஆலயங்களில் விளக்கேற்றுமாறு கட்டளையிடும் அரசாங்கம் இந்த நாட்டிலே போரில் உயிரிழந்த 145,000…

Read More

இன்று நள்ளிரவு ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது முறை ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றன. இலங்கை அரசியல் யாப்பின்படி ஜனநாயக தேர்தல் ஒன்றின் மூலம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் 6 வருடங்கள் பதவி வகிக்க முடியும் என்பதோடு பதவி காலத்தில் நான்கு வருடங்கள் பூர்த்தியான பின் மக்கள் கருத்தரிய ஜனாதிபதித் தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்க முடியும் என்றும் ஏற்பாடுகள் உள்ளன. 2005 நவம்பர் 19 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ முதல் முறையாக இலங்கையின்…

Read More

இலங்கை அகதிகள் 20 பேர் தற்கொலை முயற்சி

திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த 20 இலங்கை அகதிகள் தூக்க மாத்திரை விழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். திருச்சியில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் பல்வேறு குற்றங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஏராளமான இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்த நிலையில் நேற்று 20 பேர் தூக்க மாத்திரை விழுங்கி தற்கொலைக்கு…

Read More

மகிந்தவின் பெயரைச் சொல்லி கொள்ளை முயற்சி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பெயரைக் கூறி திருட்டு முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்றுமுன்தினம் காலை 10 மணியளவில் புன்னாலைக்கட்டுவன் தெற்கு ஈவினைச் சந்தியில் உள்ள ஐயனார் கோவில் ஆலயக் குருக்கள் வீட்டில் இந்த துணிகர சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, நேற்றுமுன்தினம் காலை வீட்டுக் கதவினை மூட சென்ற பெண்ணை இடித்து தள்ளியபடி வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் உன்ர மகன் எல்.ரீ.ரீ நாங்கள் மகிந்தவின்ர ஆக்கள் கொள்ளையடிக்க வந்திருக்கிறம் என்று கூறியவுடன்…

Read More

ராஜபக்ஷவின் தோல்வி நிச்சயம்!

எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி நிச்சயம் என தென்னிலங்கையிலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றின் பிரதம ஆசிரியர் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி நிச்சயிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. எனினும் தில்லுமுல்லுகள் மூலம் நூலிழை வாக்குகள் வித்தியாசத்தில் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த வெற்றிபெற்றாலும் அந்த வெற்றி நிலைக்காது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் தான் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும். அதன் பின்னர் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுவிடும். தற்போதைய அரசியல்…

Read More