Headlines

உறுதியான அரசை தோற்கடித்து நாட்டில் மீண்டுமொரு யுத்தத்தை கொண்டுவர சர்வதேச நாடுகள் முயற்சி..பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

பழுலுல்லாஹ் பர்ஹான் 30 வருட யுத்தத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிலிருந்து விடுபட முதற்கட்டப் பணிகளை கடந்த ஐந்து வருடங்கள் அபிவிருத்திக்கு பெரும் தொகை நிதியை செலவிட்டு நாட்டை கட்டியெழுப்பப் பாடுபட்டார். இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடியில் நடைபெற்ற பொது நிகழ்வில் சிறப்புரையாற்றுகையில் தெரிவித்தார். காத்தான்குடி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற தேசிய மர நடுகை தேசத்திற்கு நிழல் திட்டத்தை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தபின் பிரதியமைச்சர்…

Read More

பொது வேட்பாளர் குறித்து முடிவு!

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராகப் போட்டியிடுபவர் குறித்து நாளை திங்கட்கிழமை முடிவு செய்யப்படவுள்ளது. இருப்பினும் இது தொடர்பிலான உத்தியோக பூர்வ அறிவிப்பு எதிர் வரும் 21 ஆம் திகதியளவிலேயே வெளியிடப்படும் என எதிர்ப்பட்சிகளை மேற்கோள் காட்டிக் கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read More

உயர் நீதிமன்றின் விளக்கம் சபைக்குக் கிடைக்கவில்லையாம் ; கைவிரித்த சபாநாயகர்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் எந்தச் சட்டச் சிக்கலுமில்லை என்று உயர் நீதிமன்றம் வழங்கிய விளக்கம் இன்னமும் நாடாளுமன்றத்துக்குக் கிடைக்கவில்லை என சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ நாடாளுமன்றில் நேற்று தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Read More

ஜனாதிபதிக்கு கிடைக்கும் முன்னர் சட்டவிளக்கம் எவ்வாறு அரச ஊடகத்துக்கு சென்றது? – சட்டத்தரணிகள் கேள்வி

“ஜனாதிபதிக்கு கிடைக்கும் முன்னர் சட்டவிளக்கம் எவ்வாறு அரச ஊடகத்துக்கு சென்றது?” என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளது. ஜனாதிபதிக்கு இந்த சட்டவிளக்கம் நவம்பர் 10ம் திகதியன்று கிடைத்தது. எனினும் அதற்கு முன்னர் நவம்பர் 9ம் திகதியன்று அரச ஊடகம் இந்த விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து தகவல்களை வெளியிட்டது. எனவே இந்த விடயத்தை சாதாரணமானதாக எடுத்துக் கொள்ள முடியாது என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் உபுல் ஜெயசூரிய குறிப்பிட்டுள்ளார். இதன்போது உயர்நீதிமன்றத்தில் எத்தனை மனுக்கள் தாக்கல்…

Read More

தமிழ், முஸ்லிம் தலைவர்கள் ரணிலுக்கு ஆதரவளிக்க வேண்டும்!- விக்கிரமபாகு

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன,தமிழ், முஸ்லிம் தலைவர்கள் ரணிலுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற  இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்துள்ள விக்கிரமபாகு கருணாரத்ன, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைப் போட்டி தவிர்க்க முடியாதது. ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜே.வி.பி யினர் கூட்டிணைந்து ஒரு வேட்பாளரை தேர்தலில் களமிறக்குவார்கள். அதன் மூலம் அரசாங்கத்திற்கு சார்பாகவுள்ள இனவாத அடிப்படையிலான வாக்குகள் பிரிந்து செல்லும் வாய்ப்புக் காணப்படுவதால், எதிர்க்கட்சிகளுக்கு…

Read More

பொதுவேட்பாளராக போட்டியிட அர்ஜூன ரணதுங்க தயார்!

ஏற்கனவே மாதுலுவாவே சோபித தேரரின் பொதுவேட்பாளர் நிலைப்பாட்டுக்கு அர்ஜூன ரணதுங்க ஆதரவை வெளியிட்டுள்ளார். இந்தநிலையில் தாம் எப்போதும் நாட்டுக்கு முன்னுரிமை வழங்குவதன் காரணமாக எந்தக் கட்சியும் பொதுமக்களும் விரும்பினால் பொதுவேட்பாளராக போட்டியிடத் தயார் என்று அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார். இந்தநிலைக்கு தகுதியானவன் என்று கருதினால் தாம் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும் ரணதுங்க தெரிவித்துள்ளார். தாம்  ஒருபோதும் பதவிக்காக பணியாற்றியதில்லை. நாட்டை பாதுகாக்கும் விடயங்களையே முன்னெடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவரும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை கொண்டிருந்தாலும் தற்போது…

Read More

இலங்கையில் இந்தியாவின் பாரிய ஹோட்டல் முதலீடு ஆரம்பம்!

காலிமுகத்திடலில் ஐரிசி என்ற இந்த ஹோட்டல் மற்றும் குடியிருப்பு தொகுதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இதன்போது அமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் ஐரிசியின் தலைவர் வை.சி. தேவசேகர் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இதுவே குறித்த ஹோட்டல் இந்தியாவுக்கு வெளியில் மேற்கொள்ளும் முதலாவது ஹோட்டல் திட்டமாகவுள்ளது. ஏற்கனவே ஐரிசிக்கு இந்தியாவின் பல இடங்களிலும் 100 ஹோட்டல்கள் செயற்பட்டு வருகின்றன. ஐரிசியின் வருடாந்த வருமானம் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Read More

ஐ.எஸ்.ஐ.எஸ். படையில் சேர இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவழி வாலிபர் சிரியாவுக்கு தப்பியோட்டம்

ஐ.எஸ். படையில் சேர உலகின் பல நாடுகளில் இருந்து வெளியேறும் வாலிபர்கள் சிரியா அல்லது ஈராக்குக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு எதிரான வன்முறை தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இவ்வகையில், இங்கிலாந்தில் இருந்து மட்டும் சுமார் 5 ஆயிரம் பேர் சிரியா மற்றும் ஈராக்குக்கு சென்று ஐ.எஸ் படையில் சேர்ந்திருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவழியை சேர்ந்த சித்தார்த் தார்(31) என்பவர் சமீபத்தில் முஸ்லீமாக மதம் மாறினார். பின்னர், அபு ருமய்ஸா என தனது…

Read More

கட்டாரில் அப்துல் பாசித் புகாரியின் இஸ்லாமிய மாநாடு: பெருமளவிலானோர் பங்கேற்பு

கட்டாரில் இருந்து பழுலுல்லாஹ் பஹ்ஜான் அப்பாஸி கட்டாரில் இயங்கும் SLDC ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘யார் அந்த குரபாக்கள்’ எனும் தலைப்பிலான இஸ்லாமிய மாநாடு நேற்று (14) வெள்ளிக்கிழமை கட்டார் (அல் பனார்) அப்துல்லாஹ் பின் ஸைத் மாநாட்டு மண்டபத்தில் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் இத்ரீஸ் ஹஸன் (ஸஹ்வி) தலைமையில் இடம்பெற்றது. இம் மாநாட்டில் சர்வதேச மெங்கும் இஸ்லாத்தை ஏந்திச் செல்லும் தென்னிந்தியாவைச் சேர்ந்த பிரபல மார்க்க சொற்பொழிவாளர் அஷ்ஷெய்க்…

Read More

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கடலிலும் அமைதி இருக்கவில்லை: ஏ.சி. பைஸர்கான்

வாழைச்சேனை நிருபர் யுத்தம் இடம்பெற்றபோது கடலிலும் அமைதி இருக்கவில்லை என முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா கள நிலையத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஏ.சி. பைஸர்கான் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடிப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள தெரிவு செய்யப்பட்ட மீனவர்களில் 10 குடும்பங்களுக்கு சுமார் 37,500 ரூபாய் பெறுமதியான 10 தோணிகள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (13) வியாழக்கிழமை மாலை பிரதேச செயலாளர் எம்.எம். நவ்பல் தலைமையில் இடம்பெற்றது. முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா கள நிலையம்…

Read More

சோபித தேரர் வைத்தியசாலையில்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கவேண்டும் எனவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என கூறிவரும் நாகவிகரை விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் திடீர் சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலை ஒன்றில் இன்று  அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் நேற்று ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தாதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. -Thinakkural-

Read More