Headlines

சிரிய அகதிகளை அமெரிக்க ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஏற்க மறுப்பு?:தொண்டு நிறுவனங்கள் விசனம்

சிரிய உள்நாட்டுப் போரில் இடம்பெயரும் பெருமளவான அகதிகளில் மிக சொற்பளவு அகதிகளையே அமெரிக்க ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஏற்பதாக அகதிகளுக்கான இரு சர்வதேச நிறுவனங்கள் கடுமையான விசனம் தெரிவித்துள்ளன. சர்வதேச மீட்புக் குழு மற்றும் நோர்வேயின் அகதிகள் கவுன்சில் ஆகிய இவ்விரு நிறுவனங்களும் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் சிரியப் போரில் அகதிகளாகி வரும் மக்கள் தமது நம்பிக்கையை முற்றாக இழந்து வருவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தமது இந்த அகதிகளை அனுமதிப்பது…

Read More

உலக வர்த்தக மையத்தின் 69-வது மாடியில் தொங்கிய ஊழியர்கள்: 4 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மீட்பு

நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் வெளிப்புறத்தை சுத்தம் செய்த ஊழியர்கள் இருவர் சாரம் அறுந்து 69-வது மாடியில் தொங்கினர். மீட்பு பணி தக்க சமயத்தில் எடுக்கப்பட்ட நிலையில் 4 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் கடந்த 2001- ஆம் ஆண்டில் செப்டம்பர் 11-ந் தேதி அல்-காய்தா பயங்கரவாத தாக்குதலால் தகர்க்கப்பட்டது. இந்த தாக்குதலில் 2,996 கொல்லப்பட்டனர். 2006-ஆம் ஆண்டில்…

Read More

வடக்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பம்

வடக்கின் அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகளை இன்றும் நாளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நான்கு இடங்களில் ஆரம்பித்துவைப்பார். வடக்கில் அதிவேகப் பாதை நிர்மாணிக்கப்படுவதால் கொழும்பிலிருந்து கண்டிக்கும், தம்புள்ளைக்கும் ஒன்றரை மணித்தியாலத்தில் செல்லலாமென, ஊடகவியலாளர் மாநாட்டில் தகவல், ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 500 பில்லியன் ரூபா செலவில் இது நிர்மாணிக்கப்படுகிறது. அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான ஆரம்ப நிகழ்வு ரம்புக்கன, கலகெதர, கலேவல மற்றும் குருணாகலை ஆகிய நான்கு வெவ்வேறு இடங்களில் இடம்பெறும். ‘செங்கட தொரட்டுவ’ என்னும் கண்டி அதிவேகப்…

Read More

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஏற்பு?

இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றை இலங்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. இலங்கையின் அரசியல் யாப்பின்படி ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு விசாரணை ஒன்றை நடத்த முடியாது என்று முன்வைக்கப்பட்ட வாதத்தை நிராகரித்த நீதிபதி வழக்கை தொடர்ந்து விசாரணை செய்ய அனுமதி வழங்கினார். அரசியல் யாப்பின்படி ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு விசாரணையை நடத்த முடியாது என்றாலும், அவர் நிதியமைச்சராகவும் செயற்படுவதால், நிதியமைச்சர் என்ற வகையில் அவரையும் வழக்கில் சேர்க்க முடியும் என்று நீதிபதி கூறியுள்ளார்….

Read More

நீரிழிவு இல்லாத இலங்கையை கட்டியெழுப்புவோம்

ஹாசிப் யாஸீன் நீரிழிவு இல்லாத இலங்கையை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் சுகாதார அமைச்சு இன்று உலக நீரிழிவு தினத்தை அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் நீரிழிவு நோய் பரிசோதனை விசேட கிசிச்சை முகாம் இன்று வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச். றிஸ்பின் தலைமையில் இடம்பெற்றன. இப்பரிசோதனை முகாமில் காரைதீவு சண்முகா வித்தியாலய ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன்போது நீரழிவு நோய்க்கான இரத்தப் பரிசோதனை, இரத்த அழுத்தப் பரிதோனை என்பன மேற்கொள்ளப்பட்டதுடன்…

Read More

மன்னார் – வங்காலை பிரதேசத்தில் தாகம் தீக்கும் அமைச்சர் (photos)

ஏ.எச்.எம் .பூமுதீன் மன்னார் வங்காலை பிரதேசத்தில்; தாகம் தீக்கும் இடத்தில் உள்ள நீர் அதிக உப்பு தன்மை கொண்டது. ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தானாக ஊற்றெடுக்கும் ஒரு தண்ணீர் ஊற்று எது வித உப்புத் தன்மையும் இல்லாமல் மக்களின் குடிநீர் பாவனைக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது நீண்டகாலமக ஊற்றெடுத்து வரும் இந்த நீரை பரிகி பார்க்க வேண்டும் என்பது அமைச்சரின் நீண்டநாள் ஆசை. நாணாட்டான் பிரதேச நிகழ்வொன்றில் கலந்து கொள்ளச் சென்று திரும்பி வரும் வழியில்…

Read More

தாய் சேய் சுகாதார வைத்திய நிலையங்கள் வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீனினால் திறந்து வைப்பு

தாய் சேய் சுகாதார வைத்திய நிலையங்கள் வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீனினால் நேற்று (13) திறந்துவைக்கப்பட்டன. தலைமைன்னார்,தாறாபுரம்,சொர்னபுரி, பெரியமடு ஆகிய பிரதேசங்களிலேயே இந்நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன. இந்நிகழ்வுக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் டெணீஸ்வரன் ,அதிகாரிகள் மற்றும் பிரதேச பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளதை படத்தில் காணலாம்

Read More