Headlines

பேர்லின் சுவர் இடிக்கப் பட்டு 25 வருட நிறைவு

1945 ஆம் ஆண்டில் 2 ஆம் உலகப் போரில் ஜேர்மனி தோல்வியுற்றதை அடுத்து 4 துண்டுகளானது. இதில் மூன்றை பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகியவை கட்டுப் படுத்தியதுடன் இவை அனைத்தும் இணைந்து பின்னர் மேற்கு ஜேர்மனி ஆனது. இந்த நாடுகளுக்கு நட்புடன் திகழாத சோவியத் யூனியன் 4 ஆவது பாகத்தை கட்டுப் படுத்தியதுடன் அப்பாகம் பின்னர் கிழக்கு ஜேர்மனி ஆனது. மேலும் இவை தமக்கிடையே பிரிக்கப் பட்ட பகுதிகளை ஆள்வதற்காக தலைநகர் பேர்லினில் மிகப் பெரிய…

Read More

வத்திக்கான் புலனாய்வுப் பிரிவினர் இலங்கைக்கு விஜயம்

புனித பாப்பரசரர் முதலாம் பிரான்ஸிஸ் எதிர்வரும் ஜனவரி மாதம் 13ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். பாப்பரசரின் இலங்கை விஜயம் தொடர்பிலான பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் நோக்கில் வத்திக்கான் புலனாய்வுப் பிரிவினர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். இந்த மாத இறுதியில் வத்திக்கான் புலனாய்வுப் பிரிவினர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். பாப்பரசரர் பிரான்ஸிஸ் இலங்கையில் விஜயம் செய்யவுள்ள மருத மடு தேவாலயம் மற்றும் கொழும்பின் முக்கிய பகுதிகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் கண்காணிக்கவுள்ளனர். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா, பாதுகாப்பு…

Read More

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான கடலோரப்பகுதிகளில் இன்று (08) மழையுடன் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் யாழ்ப்பாணம் முதல் மட்டக்களப்பு திருகோணமலை வரையான கடலோரங்களில் அதிக மழைக்கான சாத்தியம் நிலவுகிறது. மேலும் வடமேற்கு கடலோரப்பகுதிகள் அதிகளவில் கொந்தளிப்புடன் காணப்படலாம் எனவும் வடக்கு  கடலோரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு கரையோரமாக மணிக்கு 10-30 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் எனவும் இக்காற்றின் வேகம் சுமார் 50 கிலோ மீற்றர்…

Read More

மீனவர்களிற்கு தூக்கு : திங்கள் மேல் முறையீட்டு மனுதாக்கல்

இராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து இலங்கை உச்சநீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசு மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யவுள்ளது. இராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் அகஸ்டஸ், எமர்சன், வில்சன், லாங்லெட், பிரசாத் ஆகிய 5 மீனவர்களும் போதை பொருள் கடத்தியதாக இலங்கை உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதையடுத்து மத்திய அரசு சார்பில் 5 மீனவர்களின் தூக்குதண்டனையை ரத்து செய்து விடுதலை செய்யக் கோரி இலங்கை உச்சநீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்வதாக இருந்தது….

Read More

இலங்கை மீது ஐ.நா. கடும் அதிருப்தி!

இலங்கையில் இடம் பெற்றதாக  கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தற்போது விசாரணைகளை முன்னெடுத்துவருகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் நம் பகத்தன்மை மீது இலங்கை அரசால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ய­யிட் அல் ஹுஸைன் நேற்றைய தினம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். அத்துடன், ஐ.நா. விசாரணைக்கு ஒத்துழைக்க முன்வரும் மனித உரிமைக்காப்பாளர்கள் மற்றும் தனிநபர்களை அச்சுறுத்தி அடிபணியவைக்கும் முயற்சிகளையும் அவர் கண்டித்துள்ளார். “”விசாரணைகள்…

Read More

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் விளையாட்டு தளபாடங்கள், தொழில்நுட்ப உபகரணங்கள் கையளிப்பு

பழுலுல்லாஹ் பர்ஹான் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடு மற்றும் கிழக்கின் உதயம் விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் 10 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதியில் ஏறாவூர் நகர் பிரதேசத்திலுள்ள விளையாட்டு கழகங்கள் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள், பள்ளிவாயல்கள், பாடசாலைகள் உட்பட 19 அமைப்புக்களுக்கு தேவையான உபகரணங்கள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. அன்பளிப்பு செய்யப்பட்ட 10 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு…

Read More

பொது வேட்பாளர் கரு, ஜே.வி.பி.யும் ஆதரவு..? ரணில் போட்டியிடமாட்டார்..??

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கரு ஜயசூரியவை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக கரு ஜயசூரிய போட்டியிடுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கரு ஜயசூரியவுக்கு, மக்கள் விடுதலை முன்னணியும் தனது ஆதரவை வழங்க உள்ளதாகவும் அக்கட்சியின் சார்பில் எவரும் போட்டியிட மாட்டார்கள் என்றும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கரு ஜயசூரியவுக்கு ஆதரவு…

Read More

2 வயது குழந்தைக்கு மாரடைப்பு – விமானம் அவசர தரையிறக்கம்

 பிட்ஸ்பர்கிலிருந்து போஸ்டனுக்கு சென்ற விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த 2 வயது குழந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. ஜெட் புளூ விமானத்தில் பயணித்த குழந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, விமானம் லோகன் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க அனுமதிக்கப்பட்டது. பின்னர் அக்குழந்தை விரைவாக மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது. மசாசூசெட்ஸ் காவல் துறையினர் குழந்தையை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லவேண்டும் என்பதற்காக போக்குவரத்து நெரிசல்களை சீர் செய்து ஆம்புலன்ஸ் விரைந்து…

Read More

பொது வேட்பாளர் விடயத்தில் பாரிய மாற்றங்கள் – சோபித்த தேரர்

 எதிர்வரும் சில தினங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்படக் கூடும் என நீதியான சமூகத்திற்கான மக்கள் இயக்க இணைப்பாளர் மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளர் தொடர்பில் கோட்டே நாக விகாரையில் இன்று 07-11-2014  இடம் பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த கலந்துரையாடலில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் அத்துரலிய ரத்தன தேரர், தேசிய அமைப்பாளர் நிஷாந்த…

Read More

பொது வேட்பாளரை தேடும் சந்திரிக்கா..!

எதிர்கட்சிகள் யாவற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வேட்பாளரை முன்னிறுத்தும் ஒரு பொது வேலைத்திட்டத்தை அமைப்பதில், நாடு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முக்கிய பங்கெடுத்து வருகிறார் என்று தெரியவருகிறது. ஆனால், அவர் திடீரென ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா என்பது தெளிவாக தெரியவில்லை என்றும் கட்சியகளிடையே கருத்து வேறுபாடு இருப்பினும் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கருத்து வலுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில், சமூக நீதிக்கான தேசிய இயக்கத்துக்கு தலைமை தாங்கும் வண.மாதுலுவாவே சோபித…

Read More

16 ஆயிரம் சட்டத்தரணிகளுக்கு விசேட எஸ்.எம்.எஸ்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 16,000 வழக்கறிஞர்களுக்கு விசேட எஸ்.எம்.எஸ். அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டிருக்கும் இரு கேள்விகள் தொடர்பாக திறந்த நீதிமன்றத்திற்கு முறையீடுகளை தெரிவிப்பதற்காக அவர்களின் அபிப்பிராயத்தை பெற்றுக் கொள்வதற்காக இந்த எஸ்.எம்.எஸ். அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் அஜித் பத்திரண கூறியுள்ளார். அரசியலமைப்பின் 18 ஆவது திருத்த ஏற்பாடுகளின் கீழ் மூன்றாவது பதவிக் காலத்திற்கு போட்டியிடுவதற்கு ஏதாவது தடைகள் உள்ளனவா என்பது பற்றி உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாடியுள்ளார். இந்நிலையில்…

Read More