Headlines

பலவீனமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மலையக மண்ணில் உருவான பெரும் துயரம் (சிறப்புக்கட்டுரை)

முன்னெச்சரிக்கை விடுப்ப தற்கான ஏற்பாடுகள் சரிவரச் செயற் படாதபோது இயற்கை அழிவுகளால் பாதிக்கப்படுவர்களுக்கு மரணம் மிக வேகமாக வந்துவிடுகின்றது. கடந்த தசாப்த காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் எதிர்கொண்ட யதார்த்தம் இது. ஆனா லும் இயற்கை இடர்களால் மக்கள் பாதிக்கப்படவேண்டியதைத் தடுக்க வேண்டிய பொறுப்பிலுள்ளவர்கள் இந்தத் தவறுகளைத் தொடர்ந்தும் செய்தவண்ணமுள்ளனர். உடனடி ஆபத்துள்ளதை அறியா ததாலும். அலட்சியம் செய்ததாலும் உண்டான இன்னொரு மாபெரும் துய ரம் 29ஆம் திகதி காலை கொஸ் லந்தையிலுள்ள மீரியபெத்தவில் இடம்பெற்றுள்ளது. தலைநகர் கொழும்…

Read More

பொலிஸாருக்கு புதிய சீருடை – பிரதமர்

இலங்கை பொலிஸாருக்கு புதிய சீருடையை அரசு அறிமுகப்படுத்த இருப்பதாக பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்துள்ளார். மேலும் பொலிஸாருக்காக புதிய பல சேவைகளை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

Read More

போப்பின் இலங்கை விஜயத்தின் பின்னர் உடனடியாக தேர்தல் நடத்தக் கூடாது – கத்தோலிக்கச் சபை

கத்தோலிக்கச் சபை போப் பிரான்ஸிஸின் இலங்கை விஜயத்தைத் தொடர்ந்து உடனடியாக தேசிய ரீதியான தேர்தல்களை நடத்தக் கூடாது என கத்தோலிக்கச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. போப் பிரான்ஸிஸின்  இலங்கை விஜயத்தை தொடர்ந்து உடனடியாக தேர்தல் நடத்தப்பட்டால் அதன் மூலம் ஒரு சில தரப்பினர் அரசியல் லாபமீட்ட முயற்சிக்கக் கூடும் என கத்தோலிக்கச் சபையின் பேச்சாளர் சிரில் காமினி பெர்னாண்டோ அருந்தந்தை தெரிவித்துள்ளார். போப் பிரான்ஸிஸின் இலங்கை விஜயம் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளதுடன்…

Read More

மீன்பிடித் தடை – இலங்கைக்கு 13 பில்லியன் நஷ்டம்

ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள மீன்பிடித்தடையால் தாம் வருமானம் மற்றும் தொழில் என்பவற்றை இழக்க நேரிடும் என இலங்கை மீனவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர் வவுனியாவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மீனவ சங்க பிரதிநிதிகள் இந்த கருத்தை வெளியிட்டனர். இந்த மீன்பிடித் தடையினால் இலங்கைக்கு 13 பில்லியன் ரூபாய்கள் நஷ்டமேற்படுவதுடன் சுமார் 30 ஆயிரம் பேர் தமது தொழில்களை இழக்க நேரிடுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த நிலைமையை சரி செய்வதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு…

Read More

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்; விமான சேவைகள் பாதிப்படையவும் வாய்ப்பு

இலங்கையின் பிரதான விமான சேவை நிலையமாக காணப்படும் கட்டுநாயக்க விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக  விமான நிலைய சுதந்திர ஊழியர் சங்கத் தலைவர் பி.முகந்திரம் தெரிவித்துள்ளார். பிரதானமாக 5 கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுள்ளது. அதாவது 10000 ரூபா சம்பள உயர்வு, வைத்திய காப்புறுதி, சேவை கடன்தொகை வழங்கல், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரியை அகற்றல், ஊழியர்களுக்கு ஓய்வு நேரம் வழங்கல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்துள்ளோம்….

Read More

இருளில் மூழ்கும் பூமி கற்பனையானது : நாசா

சமுக வலைத்தளங்களில் வெளியானது போன்று டிசம்பர் மாதம் ஆறு நாட்கள் பூமி இருளாக காணப்படும் என்ற செய்தி வதந்தியென நாசா அறிவித்துள்ளது. அண்மையில் சமுக வலைத்தளங்களில் நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளதாக வெளியாகிய வதந்திச் செய்தியில் :- “சூரியனில் புயல் வீசப் போவதால் டிசம்பரில், 6 நாட்கள் உலகம் இருளில்மூழ்கும்.  சூரிய மண்டலத்தில் அடிக்கடி புயல்வீசுவது உண்டு. சுட்டெரித்து சாம்பலாக்கி விடும் இந்த பயங்கர புயல்களால், மற்ற கிரகங்களில் பாதிப்பு ஏற்படும்  பெரும்பாலான சூரிய புயல்களால்,…

Read More

ஐமசுமுயும் ஐதேகவும் முஸ்லிம் விரோதிகளே……- கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல் தவம்

ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஐக்கிய தேசிய கட்சியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்று தொடர்ந் தேர்ச்சியாக நான் கூறி வருவதுண்டு. ஆனால், அதனை மறுத்து, பலர் என்னை விமர்சித்து வந்தனர். இன்று நான் எதனைக் கூறினேனோ அதுவே நடந்திருக்கிறது. அதாவது; பெரும் தலைவர் அஷ்ரப் அவர்கள், சிறுபான்மை மக்களுக்கு சொந்தமான நிலங்களை, மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரண்டு கட்சிகளின் அரசாங்கங்களும், திட்டமிட்ட வகையிலான பெரும்பான்மை இனக் குடியேற்றங்கள்…

Read More

அமைச்சர் றிஷாத் ஒஸ்ரியாவிலிருந்து பிரான்ஸ் பயணம்

ஊடகப்   பிரிவு ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் ஒஸ்ரியாவில் இடம்பெற்ற விஷேட மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற கைத்தொழில், வாணிபத்துறை அமைச்சரும் அ.இ.ம.கா. தேசிய தலைவருமான றிஷாத் பதியுதீன், நாளை 6 ஆம் திகதி ஒஸ்ரியாவிலிருந்து பிரான்ஸ் நாட்டுக்கு விஜயம் செய்கின்றார். இலங்கை – பிரான்ஸ் கூட்டு வர்த்தக சம்மேளனம் மற்றும் முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்றில் பங்குபற்றும் பொறுட்டே அமைச்சர் றிஷாத் பிரான்ஸ் நாட்டுக்கு விஜயம் செய்கின்றார். குறித்த கலந்துரையாடலின்போது இலங்கை தற்போது அடைந்துவரும் வர்த்தக…

Read More

இலங்கை வான்பரப்பில் பறந்த மர்ம பொருள் வேற்றுக்கிரகத்துக்குரியது என உறுதி?

அண்மையில் பொலன்னறுவை வான்பரப்பில் பறந்த மர்ம சிலந்தி வலை நூல்கள் வேற்றுக்கிரக பொருட்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்தச் சம்பவம் நடைபெற்றிருந்தது. வான் பரப்பு பூராகவும் வெள்ளை நிறத்தில் மிதந்து கொண்டிருந்த இந்த மர்ம சிலந்தி வலை நூல்கள் அதன் பின் ஹம்பாந்தோட்டை பிரதேசத்திலும் ஓரிரு இடங்களில் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இங்கிலாந்து கார்டிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திரா விக்கிரமரசிங்க இது தொடர்பாக ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தார்.

Read More

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்; 8 பேர் காயம்

மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் எட்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையே நேற்று மாலை இந்த மோதல் சம்பவம் பதிவாகியிருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மோதலில் காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைகளின் பின்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

சட்டவிரோத ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நாம் தயாரில்லை – அனுரகுமார திசாநாயக

தேர்தலை தடுக்க நாம் முயற்சிக்கின்றோமே தவிர அரசாங்கத்தை கவிழ்க்க தேர்தலை நடத்துவதற்கு நாம் தயாரில்லை. அரசியல் அமைப்பினையும், சட்டத்தையும் பாதுகாக்க வேண்டும். அரசியல் யாப்புடன் விளையாட எவருக்கும் இடமளிக்க மாட்டோம் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்துள்ளார். சந்தர்ப்பம் பார்த்திருக்காது நாட்டில் சட்டத்தினை நிலைநாட்ட ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கு சகல விதத்திலும் அரசாங்கம் தயார் என தெரிவித்துள்ள நிலையில் ஜே.வி.பி.யின் நிலைப்பாடு தொடர்பில் வினவிய…

Read More

வரலாற்று வீரா்களின் வரிசையில், மஹிந்த ராஜபக்சவின் பெயரும் இணைக்கப்பட வேண்டும் – ஒமல்பே தேரர்

வரலாற்று வீரா்களின் வரிசையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பெயரும் இணைக்கப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளர்  ஒமல்பே  தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். 30 ஆண்டு காலமாக நீடித்து வந்த போரை ஜனாதிபதி நிறைவுக்குக் கொண்டு வந்தார். கடந்த காலங்களில் ஆட்சி வகித்த ஜனாதிபதிகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரபாகரனை தோற்கடிக்க முடியாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர்.   எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்சவை வெற்றி பெறச் செய்து தேசத்தின் எதிர்காலத்தை…

Read More