Headlines

கலக்கமா மயக்கமா ? தெளிவு பெறுங்கள் என்று….

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்  தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் வாவா அவர்கள் உங்களை விளிக்கிறார் . உங்களைப் பார்த்து கூறிகிறேன் : STAND UP AND BE COUNTED சில நாட்களாக கிழக்கில் முஸ்லிம்கள் யாருக்கு ? என்ற சொல்லை வைத்துக் கொண்டு கையில் பொல்லு ஓன்று மட்டும் இல்லாத குறையாக அறிவியல் ஜானத்தில் பூச்சியம் என்று மக்களால் முத்திரை குத்தப் பட்ட சில அரசியல் வாதிகளின் அம்புலி மாமா கதை…

Read More

மரண தண்டனை கைதிகளை பார்வையிட்ட இந்திய தூதுவர்

இந்திய மீனவர்கள்  ஐவருக்கு  அண்மையில் இலங்கை நீதிமன்றினால் மரணதண்டனை வழங்கி தீர்பளிக்கப் பட்டிருந்தது. குறித்த  மீனவர்களைப் பார்வையிட இன்று வெலிக்கடை  சிறைக்கு   சென்ற  இலங்கைக்கான  இந்திய தூதுவர் Y.K.சிங்ஹா மரண தண்டனை கைதிகளை பார்வையிட்டு அவர்களுடன் உரையாடியபின்  சிறைச்சாலையில் இருந்து வெளியேறியபோது…… பட  உதவி – இந்திய தூதரகம்

Read More

கொஸ்லாந்தை வீதியில் பாரிய வெடிப்பு (Breaking News)

கொஸ்லாந்தை, பூனாகலையூடாக பண்டாரவளைக்கு செல்லும் வீதியில், 3ஆம் மற்றும் 4ஆம் கிலோமீற்றருக்கு இடையில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன் வீதியும் கீழிறங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அவ்வீதியுடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பஸ்களில் பயணிக்கும் பயணிகள் 3ஆம் மற்றும் 4ஆம் கிலோமீற்றருக்கு இடையில் நடந்து சென்று பஸ்களில் மாறி தங்களுடைய பயணங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

சீனாவின் கேளிக்கை பூங்காவில் 8 வயது சிறுமியை புலி கடித்து கொன்றது

சீனாவின் தென் மேற்கில் உள்ள சாங்கிங் நகரில் லேகெலுடு என்ற இடத்தில் கேளிக்கை பூங்கா உள்ளது. அங்கு 8 வயது சிறுமி தனது உறவினர்களுடன் சென்று இருந்தாள். பல இடங்களுக்கு சென்ற அவர்கள் அங்கு நடந்த சர்க்கசை பார்க்க சென்றனர். அவர்களுடன் சிறுமியும் சென்று இருந்தாள். அப்போது அங்கு புலிக்கு பயிற்சி அளித்து கொண்டிருந்தனர். அதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த சிறுமி புலி நடமாடிய பகுதிக்குள் தவறி விழுந்தாள். உடனே அவளை அந்த புலி பாய்ந்து கடித்து…

Read More

உயிர்களை பறிகொடுத்த மலையக மக்கள் விடுக்கும் அவசர கோரிக்கை

பதுளை-மீறியபெத்தை இடம்பெற்ற மண்சரிவினைத் தொடர்ந்து தமக்கு பாதுகாப்பான சொந்த வீடு, சொந்த காணி வேண்டும் என்ற குரல் மலையகத்திலிருந்து வெளிவரத் தொடங்கிவிட்டன. அண்மையில் கொஸ்லாந்தை மீறியபெத்தை தோட்டத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு அனுதாபங்களை தெரிவித்து மலையகத்தின் பல்வேறு தோட்டப்பகுதிகளிலும் பேரணி, ஆர்ப்பாட்டம், அஞ்சலி கூட்டம் நடைபெற்று வருகிறது. இவ்வாறான அனர்த்தங்களுக்கு இனிமேல் இடமளிக்காமல் மலையக மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஒட்டுமொத்த மலையக மக்களும் கோரிக்கை…

Read More

சர்வதேச விசாரணை நிறைவு- இலங்கை மீது அழுத்தங்கள் அதிகரிக்குமா?

இலங்கை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஐ.நா விசாரணைக் குழு, எழுத்துமூல சாட்சி விசாரணைகளை நிறைவுசெய்துள்ளதாக சட்டத்தரணி கலாநிதி பிரதீப மஹானாமஹேவா தெரிவித்துள்ளார். இந்த விசாரணைகளில் முக்கியத்துவம் வாய்ந்த, பொதுமக்களின் சாட்சியங்களை பெற்றுக்கொள்ள பல்வேறு அமைப்புக்கள் உதவி புரிந்துள்ளதால், இந்த விடயத்தில் அதிகளவிலான அழுத்தங்கள் நாட்டிற்கு ஏற்படக்கூடும். எழுத்துமூல மற்றும் வாய்மூல சாட்சியங்கள் தற்போது பதிவுசெய்யப்பட்டுள்ளதால் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் அறிக்கை தயாரிக்கப்பட்டு, பெப்ரவரி மாத இறுதியில் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் மனித உரிமைகள் பேரவை இறுதித்…

Read More

மீனவர்களே அவதானம்: அனர்த்த முகாமைத்துவம் அறிவுறுத்தல்

யாழ்.மாவட்டத்தில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவுறுத்தியுள்ளது. யாழ்.மாவட்டத்தில் கூடிய காற்றுடன் மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகமிருப்பதால் மீனவர்கள் அவதானமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பான அறிவுறுத்தல்களை மீனவர் சமாசங்கள் ஊடாக விடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மரண தண்டனை கைதிகள் பரிமாற்றம் – இன்று விசாரணை

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து தமிழக மீனவர்களையும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கைதி பரிமாற்ற உடன்படிக்கையின் கீழ் இந்தியாவுக்கு அழைக்க வேண்டும் என்று கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மேல்நீதிமன்றத்தில் இந்த மனு நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி எஸ் எம் ஆனந்த முருகன் தாக்கல் செய்த இந்த மனுவில் இரண்டு நாடுகளும் செய்து கொண்டுள்ள கைதி பரிமாற்ற உடன்படிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த ஐந்து மீனவர்களும் இந்தியாவின் கரையில் இருந்து 12 கிலோ மீற்றருக்குள்…

Read More

பிரான்ஸ் நிறுவனம் கண்டுபிடித்த டெங்கு மருந்து வெற்றி!

பிரான்ஸில் உள்ள மருந்து நிறுவனம் கண்டுபிடித்த டெங்கு காய்ச்சலுக்கான மருந்து வெற்றியடைந்து உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு எந்தவித மருந்துமின்றி உயிரிழப்பு அதிகம் நேர்ந்து கொண்டிருக்கிறது.  இந்நிலையில்தான் உலகம் முழுக்க கொசுக்களால் உண்டாகும் டெங்கு காய்ச்சலுக்கு ஃபிரான்ஸ் மருந்து நிறுவனம் ஒன்று டெங்கு மருந்து கண்டுப்பிடித்து உள்ளது. இந்த நிறுவனம் கண்டுப்பிடித்த மருந்து சக்சஸ் ஆகியதைத் தொடர்ந்து 18 வயது முதல் 45 வயது வரையிலானவர்களுக்கு இந்த மருந்தைக் கொடுத்து பரிசோதனை செய்துப் பார்த்ததில் அவர்கள்…

Read More

கிழக்கு உக்ரைனில் சர்வதேசத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் நடந்த தேர்தலில் ரஷ்ய ஆதரவாளர் வெற்றி

ஞாயிற்றுக்கிழமை கிழக்கு உக்ரைனின் சர்ச்சைக்குரிய டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் நகரங்களில் பாரளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கிளர்ச்சியாளர்களால் நடத்தப் பட்ட தேர்தலில் ரஷ்ய ஆதரவாளரும் அவர்களால் நியமிக்கப் பட்ட தற்போதைய பிரதமருமான அலெக்ஸாண்டர் ஜகார்சென்கோ வெற்றி பெற்றிருப்பதாகத் சுயமாகத் தன்னை டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு எனப் பிரகடனப் படுத்தியிருக்கும் பகுதியின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் ரஷ்ய ஆதரவாளர்களால் சுயமாக லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு எனப் பிரகடனப் படுத்தப் பட்டிருக்கும் பிரதேசத்தின் மத்திய தேர்தல் கமிசனின்…

Read More

ISIS இற்கு எதிரான யுத்தத்தில் சிங்கப்பூர்!

திங்கட்கிழமை சிங்கப்பூர் அரசு ஈராக் மற்றும் சிரியாவில் ISIS இற்கு எதிரான போரில் தனது பங்களிப்பையும் நல்கப் போவதாக அறிவித்துள்ளது.ஏற்கனவே ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த முக்கிய சில நாடுகளும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு அரபு தேசங்களும் ISIS மீது வான் தாக்குதல்களைத் தீவிரப் படுத்தி வருகின்றன. தரை வழியாக ஈராக்கின் குர்து பேஷ்மெர்கா படையும் தாக்குதலைத் தொடுத்து வருகின்றது. இந்நிலையில் மத்திய கிழக்கில் ISIS உடன் போராடி வரும் சர்வதேச கூட்டணி நாடுகளுக்கு ஆலோசகர்கள் அளித்தல்…

Read More

தேர்தல் என்றாலும் பாப்பரசர் இலங்கை வருவார்: திருகோணமலை ஆயர்

வத்திக்கானில் இருந்து பாப்பரசரின் விஜயம் தொடர்பில் வந்துள்ள குழுவினருக்கும், அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான அரசாங்க குழுவினருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். இந்த சந்திப்பில் இலங்கை படைகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். இந்த சந்திப்பின்போது தேர்தல் ஒன்று தொடர்பில் பேசப்படவில்லை, ஏனெனில் தேர்தல் திகதி ஒன்று இன்னும் அறிவிக்கப்படாமையாலாகும். இந்தநிலையில் பாப்பரசர் வருவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் தேர்தல் ஒன்று நடைபெறுமானால் நாடு இயல்புக்கு திரும்ப அந்த நாட்கள் போதுமானதாக இருக்கும்…

Read More