Headlines

சுனாமி வரவு செலவு திட்டம் -2015

ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் வரவு செலவு திட்டம் 2015 பற்றி , இதை தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் வாவா அவர்கள் சாதாரண மக்களுக்கும் விளங்கும் மொழியில் இதை ஒரு சுனாமி வரவு செலவு திட்டம் என வர்ணிக்கிறார் . சுனாமி அனர்த்தம் நீங்கள் எல்லோரும் அறிந்தது , அதாவது கடல் தன்னை உள்வாங்கி பின்னேர் சீறிப் பாயும் . இதே போல்தான் முதலில் உங்களுக்கு ஆனந்தமாக இருக்கும் , ஆனால் சிறிது…

Read More

தலைவர் ஹக்கீம்,செயலாளர் ஹசன் அலி இற்கிடையிலான முறுகல் அரசாங்கத்திற்கு மு.கா சிவப்புக் கொடி காட்டுவதற்கான சமிஞ்சையா..??

ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் ஜனாதிபதித் தேர்தலில் மு.கா யாரை? ஆதரிப்பது என்பதில் மிகப் பெரிய சாவாலை எதிர் கொண்டு வருகிறது.இவ் அரசாங்க ஆட்சிக் காலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகள் காரணாமாக முஸ்லிம்கள் தற்போதைய அரசின் மீது வெறுப்படைந்துள்ளதனால்,அரசை ஆதரிப்பது தங்கள் தலை மீது தாங்களே  மண்ணை அள்ளிக் கொட்டும் செயலாய் அமைந்துவிடும் என்ற காரணத்தினாலும்,அரசின் செயற்பாடுகளை பொருந்திக்கொள்ள முடியாமையினாலும் அரசை விட்டு மு.கா வெளியேற வேண்டும் என்பதில் மு.கா உறுப்பினர்கள் பலர் உறுதியாக உள்ளனர்.இவ் விடயத்தில்…

Read More

சிலாவத்துறையில் வெள்ளப்பெருக்கு – ரிப்கான் பதியுதீன் துரித நடவடிக்கை

ஏ.எச்.எம் பூமுதீன் மன்னார்- சிலாவத்துறை பிரதேசத்தில் அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை அடுத்து ஸ்தலத்திற்கு உடன் விஜயம் செய்த வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், அங்கு மேற்கொள்ள வேண்டிய உடனடி தேவைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆராய்ந்துள்ளார். முள்ளிக்குளம், பாலைக்குளி, கரடிக்குளி ,காயாநகர் போன்ற கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருப்பது குறித்தும் அதிகாரிகள் ,கடற்படை மற்றும் இராணுவத்தினருடன் கலந்துரையாடியுள்ளார். கல்லாத்து பாலத்தின் மேலாக நீர் பாய்ந்து ஓடுவதால் மேற்படி கிராமங்களுக்கான போக்குவரத்தில் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை நாளை…

Read More

மண்சரிவு ஏற்பட பிரதான காரணம் ஆய்வு மூலம் கண்டுபிடிப்பு

கொஸ்லாந்த மீரியபெத்தயில் மண்சரிவு ஏற்பட பிரதான காரணம் அங்கு வசித்த மக்கள் அப்பகுதியில் உயர் பாதுகாப்பு வலயத்தில் மரக்கறி உற்பத்தி செய்தமையே என ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. இற்றைக்கு எட்டு வருடங்களுக்கு முன்னர் இப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டிய ஓரிடம் என எல்லையிடப்பட்டு தூண்களும் நடப்பட்டு இலக்கமிடப்பட்டதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட பேராதனை பல்கலைக்கழக புவியியல் விஞ்ஞானப் பேராசிரியர் கபில தஹநாயக்கா, மேல் நீர்பரப்பு பாதுகாப்பு திட்ட முன்னாள் பணிப்பாளரும் சுற்றாடல் ஆய்வாளருமான…

Read More

பதுளை கொஸ்லாந்தை மண்சரிவு! சத்திய வாக்குமூலம்

மண்சரிவில் 400 பேர் வரை காணாமல்போனதாக கூறப்பட்டாலும், இதுவரையில் 6 சடலங்களே மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிடுகையில், 2005ம் ஆண்டிலிருந்து மலை வெடித்து இருந்தது. வேறு இடத்திற்கு எழும்புமாறு கூறியிருந்தார்கள். ஆனால் வீடு கொடுக்காமல் இந்த மக்கள் எங்கே போவது. மக்கள் புதையுண்ட இடத்தில் தோண்டால் இராணுவத்தினர் வேறு இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதாக குற்றம் சாட்டியுள்ளார். 5 அடி ஆழத்தில் தான் புதையுண்டு இருப்பார்கள் என அவர் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளார்….

Read More

காலங்கடந்தாலும் சாட்சியங்கள் ஏற்கப்படும்

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு விற்கு ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண் டிய கால எல்லை முடிவடைந்துள்ள போதிலும் காலம் பிந்தி சமர்ப்பிக் கப்படுபவற்றை ஏற்றுக்கொள்ள தயார் என மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் களின்படி, ஒக்டோபர் 30 திகதி யுடன் ஆதாரங்கள் போன்றவற்றை சமர்ப் பிக்க வேண்டும்.தனக்கு கிடைத்த தகவல்களை குழு ஆராய்வதற்கு இலகுவாகவே இந்த…

Read More

சிக்கினார் லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி

முச்சக்கர வண்டி சாரதி ஒருவரிடமிருந்து  7000 ரூபாவை லஞ்சம் பெற்றுக் கொண்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கந்தானை மோட்டார் போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குற்றச் செயல் ஒன்று தொடர்பில் வழக்குத் தொடராமல் இருப்பதற்காக இவ்வாறு லஞ்சமாக 7000 ரூபா பணத்தைப் பெற்றுக் கொண்டதாக அரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் லஞ்ச ஊழல் தவிர்ப்பு விசாரணைப் பிரிவினரும் பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Read More

பதுளை கொஸ்லாந்தையில் இன்றும் இரண்டு சடலங்கள் மீட்பு

பதுளை கொஸ்லாந்தை – மீறியபெத்தை தோட்ட மண்சரிவில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் இன்று ஆறாவது நாளாகவும் தொடர்கிறது. இந்நிலையில் இன்றும் இரண்டு சடலம் மீட்கப்பட்டுள்ளது அதன்படி மண்ணுக்குள் புதையுண்ட 7 பேரின் சடலம் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் சீரற்ற காலநிலையால் மீட்பு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. எனினும் மழையுடன் கூடிய காலநிலையால் மீட்பு பணிகள் தாமதமடைந்துள்ளன. இதேவேளை மீறியபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈரான் அரசாங்கம் அனுதாபம் தெரிவித்துள்ளது. மண்சரிவில் உயிரிழந்த, காணால் போனவர்களின்…

Read More

மீரியாபெத்தை கிராமம் அபாய பிரதேசமாக பிரகடனம்

மண்சரிவுக்கு உள்ளான பதுளை, கொஸ்லந்த, மீரியாபெத்த கிராமம், அபாயப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் ஐந்தாவது நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்ட மீட்புப் பணிகளின் போது, சுமார் 25 முதல் 30 அடி ஆழத்திலிருந்து இந்த சடலமொன்று கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களில் 6 சடலங்கள் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும், மீரியாபெத்த மண்சரிவில் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலை தோன்றுவதாகவும் அச்சடலங்களை…

Read More

அரசாங்கத்திலிருந்து விலக தயாராகும் ஜாதிக ஹெல உறுமய

அரசாங்கத்திலிருந்து விலக ஜாதிக ஹெல உறுமய கட்சி தீர்மானித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜாதிக ஹெல உறுமயவினால் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளுக்கு வழங்கப்படும் பதிலைப் பொறுத்தே, 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் போது ஆதரவாக வாக்களிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார். தமது கட்சி முன்வைத்த யோசனைகளுக்கு உரிய பதில் கிடைக்காத பட்சத்திலேயே வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம்…

Read More

யாரும் எ திர்பார்க்காத முடிவை எடுப்போம்- முஸ்லிம் காங்கிரஸ்

தேசிய தேர்தலில் யாரும் எதிர்பார்த்திராத முக்கியமான நகர்வு ஒன்றை கட்சி மேற்கொள்ளவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் பதவி அரசியலைக் கைவிட முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. அமைச்சுப் பதவிகள் உள்ளிட்ட பதவி அரசியல் மூலம் முஸ்லிம்களின் அரசியல் இருப்பு, உரிமைகள், எதிர்பார்ப்புகள் என்பவற்றை நிறைவேற்றுவதில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் பதவி அரசியல் நிலைப்பாட்டிலிருந்து வெளியே வர கட்சி தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தேசிய தேர்தலில் யாரும் எதிர்பார்த்திராத…

Read More

ஓட்டமாவடி பிரதே சபை உறுப்பினர்கள் சபை அமர்வினை பகிஸ்கரிப்பதற்கான காரணம் என்ன?

அஹமட் இர்ஸாட் சில நாட்களுக்கு முன்பாக ஓட்டமாவடி பிரதேச சபையில் உள்ள ஆறு உறுப்பினர்களால் சபையின் தவிசாளர் KPS. ஹமீட் அவர்களுக்கு எதிராக பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளருக்கு எழுதப்பட்டு கையொப்பமிடப்பட்ட மகஜர் ஒன்று இணைய தளங்களிலும், முகநூல்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இதன் உண்மை நிலையினை அறிந்து கொள்வதற்காக குறிப்பிட்ட தவிசாளர் மீது அதிர்ப்தி அடைந்துள்ள பிரதேச சபை உறுப்பினர்களை கூட்டாக சந்தித்து இணையதள வாசகர்களுக்காக செய்தியினை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு நேற்று முன்தினம் (01) கிடைத்தது. அதனை…

Read More