பாக். அரசின் நிதிக்கு மேலதிகமாக அமைச்சர் பெசில் ரூ. 130மி ஒதுக்கீடு
ஏ.எச்.எம் .பூமுதீன் வன்னி மக்களுக்கான வீடமைப்பு திட்டத்துக்கு பாகிஸ்தான் அரசு வழங்கும் 220 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டுக்கு மேலதிகமாக – 130 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்து குறித்த திட்டத்துக்கு உதவியளிக்க அமைச்சர் பசில் ராஜபக்ஷ முன் வந்துள்ளார். இது தொடர்பான அதிகார பூர்வ அறிவித்தலை அமைச்சர் பசில் மன்னார் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வைத்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அரசின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கபடவுள்ள வீடமைப்பு திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர்…
