Headlines

மூன்றாவது தடவையாகவும் தேர்தலில் போட்டியிட மஹிந்தவுக்கு தகுதியில்லை

ஜனாதிபதி மஹிந்த மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட் டியிட முடியுமா அல்லது இல் லையா என்பது குறித்து சட்ட ரீதியாக சர்ச்சை மூண்டுள்ள நிலை யில், அவருக்கு மீண்டும் ஜனாதி பதி தேர்தலில் போட்டி யிடுவ தற்கு சட்டரீதியான தகுதி இல்லை என்று பிரபல சட்டநிபுணர்கள் முன்வைத்துள்ள கருத்தினை தேர் தல்கள் ஆணையாளரிடம் சமர்ப் பிக்கவுள்ளதாக இலங்கை சட் டத்தரணிகள் சங்கம் தெரிவித் துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ மூன்றாவது தடவையாகவும் ஜனாதி பதித் தேர்தலில்…

Read More

எபோலா அச்சம் வேண்டாம்!

எபோலா குறித்து அமெரிக்கர் எவரும் அச்சமையடையத் தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 4 ஆயிரத்து 500 பேரை பலிகொண்டுள்ள எபோலா வைரஸ் நோய், அமெரிக்காவையும் அச்சுறுத்தி வருகிறது. அங்கு 3 பேரை ஏற்கனவே இந்த நோய் தாக்கி உள்ளது. ஏறத்தாழ 100 பேர் எபோலா வைரஸ் தாக்குதல் சந்தேகத்தின் பேரில் கண்காணிக்கப்படுகின்றனர். இந்த வைரஸ் நோயை ஒபாமா நிர்வாகம், கையாண்டு வரும் விதம், விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. மேற்கு…

Read More

அமைச்சர் றிசாத் பதியுதீனின் முயற்சியில் தையல் பயிற்சி நிலையங்கள்

இர்ஷாத் றஹ்மத்துல்லா வடக்கிலும், அதற்கு வெளியிலும் வாழும் தொழிலற்ற யுவதிகள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுததுச் செல்லும் வகையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் முன்னெடுத்துவரும் மக்கள் நலன் திட்டத்தின் அடுத்த கட்டமாக 3000 யுவதிகளுக்கு தையல் பயிற்சியுடன் கூடிய இலவச தையல் இயந்திரங்களை வழங்கும் நிகழ்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் கடந்த 20 வருடங்களாக வாழும் மக்கள் தமது வாழ்வாதாரத்தை ஓரளவேனும் முன்னெடுத்துச் செல்லும் வகையில் அன்றைய அமைச்சராக இருந்த அமரர் டாக்டர் ஜயலத்…

Read More

யுத்தக்குற்ற விசாரணைக்கு ஆதாரங்களை வழங்கப் போகும் கெலும் மக்ரே

இலங்கையில் இறுதிக் கட்டத்தில்  இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சர்வதேச விசாரணைக் குழுவிடம் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக சனல் 4 இன் ஊடகவியலாளர் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார். சர்வதேச விசாரணை  நேர்மையானது , எதிர்காலத்தில் இந்த விசாரணை நீதிநடவடிக்கைகளுக்குவழிவகுக்க கூடும், எமது வீடீயயோக்கள் பொய்யானவை, ஆதாரமற்றவை என எம்மை விமர்சனம் செய்யும் இலங்கை அரசாங்கமும், அதன் இராணுவமும் குற்றம்சாட்டியது, ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களது குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை நீருபிப்பதற்க்கு எமக்கு புதிய ஆதராங்கள்…

Read More

கொழும்பில் பதற்றம்

கொழும்பு – மாளிகாவத்தையில் அமைந்துள்ள மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சுக்கு முன்பாக  ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது. சுமார் 500ற்கும் மேற்பட்ட மீனவர்கள் அமைச்சுக்கு முன்பாகக் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Read More

இஸ்ரேலுக்கு பாலஸ்தீன் கெடு ; ஐ.நா. பாதுகாப்புச் சபையில் வாக்கெடுப்பு

அனைத்து பலஸ்தீன நிலங்களில் இருந்தும் இஸ்ரேல் வெளியேறுவதற்கு 2016 ஒக்டோபர் மாதத்தை இறுதி கெடுவாக விதிக்கும் தீர்மானத்தின் மீது இந்த ஆண்டு இறுதிக்குள் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஐ.நாவுக்கான பலஸ்தீன தூதுவர் ரியாத் மன்சூர் அறிவித்துள்ளார். எனினும் பாதுகாப்புச் சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா இந்த தீர்மானத்தை எதிர்க்கும் நிலையில் அது தோல்வி அடைந்தால் மாற்று தீர்வு எடுக்கப்படும் என்று மன்சூர் குறிப்பிட்டுள்ளார். “இது ஒரு…

Read More

தோல்வியடையும் ஜனாதிபதி வேட்பாளாருக்கு ரவூப் ஹக்கீம் உதவுவார் என நம்பவில்லை – விமல் வீரவன்ச

அஸ்ரப் ஏ. சமத்  ஜரோப்பிய நாடுகள் ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு தடைகளை ரத்து செய்தமை தொடர்பாக அண்மையில் ஜரோப்பிய நாட்டுக்கு எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விஜயத்தின் வெளிப்பாடே இது. தேர்தல் காலத்தில் அவர் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று சில இரகசிய விடயங்களை செய்வது வழக்கம்.  ரணில்விக்கிரமசிங்க  ஜரோப்பா நாடுகள்  மட்டுமல்ல மலேசியாவுக்கும் சென்று அந்த நாட்டில் இயங்கும் விடுதலைப்புலிகளை சந்திக்க இருந்துள்ளார். என்பதை அரசாங்கம் அறிந்து வைத்துள்ளது. இன்று(19) பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணி…

Read More

பாஹிருக்கு ஜனாதிபதி விருது..!

2014 ஆம் ஆண்டுக்கான சிறந்த விஞ்ஞான ஆய்வுக்கான ஜனாதிபதி விருதை சூழலியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான எம்.எம். பாஹிர் பெற்றுள்ளார். எதிர்வரும் 31ஆம் திகதி பத்தரமுல்லை, கிரேண்ட்போல் றூம் ஹோட்டலில் நடைபெற விருக்கும் விருது வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து விருது பெறவுள்ள இவர், ப்ரபோதய சஞ்சிகை, திவயின பத்திரிகை ஆகியவற்றில் பல்வேறு கட்டுரைகளை எழுதி வருகிறார். தப்ரபேனிகா  ஆய்வுச் சஞ்சிகையின் உதவி ஆசிரியரான இவர், ஏற்கனவே 2002, 2004, 2005, 2007, 2009, 2010ஆம் ஆண்டுகளில்…

Read More

கபீர் ஹசீமின் பதிலடி..!

புலிகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் தீர்ப்பினை அரசாங்கம் புரிந்துகொள்ளத் தவறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் தீர்ப்பு பற்றிய புரிதல் இன்றி அரசாங்கம் கருத்து வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார். கட்சிக் கூட்டங்கள் மற்றும் சில தேவைகளுக்காக ரணில் விக்ரமசிங்க லண்டன் சென்றதாகவும்…

Read More

”ஜனாதிபதியின் தம்பி என்பதால், நான் எல்லாவற்றையும் செய்யலாம் என கூறுவது தவறாகும்” கோட்டா

அபிவிருத்திப் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்தமைக்கு ஜனாதிபதியின் சகோதரர் என்பது காரணமாகவில்லை எனவும் அந்த பணிகளை தனது பணியாக நினைத்து செயற்படுத்தியமையே இதற்குக் காரணம் எனவும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். Nf டுடனான விஷேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார். கேள்வி உங்களது கண்காணிப்பின் கீழ் பெறும் தொகையானோர் சேவையாற்றுகின்றனர். பல நிறுவனங்களும் உள்ளன. அவர்களுக்கு எவ்வகையான ஆலோசனையை வழங்குவீர்கள்? பதில் மக்களின் வாழ்விற்கு தகுதியான இடங்களாக உருவாக்குவதற்காகவே…

Read More

நூல் வெளியீட்டில் கண் கலங்கியது! சரித்திரத்தில் இடம்பிடித்த ரிஷாத் ….

ஏ.எச்.எம். பூமுதீன் மன்னாரில் இடம்பெற்ற்  ஏ.ஆர்.ஏ ரஹீம்  என்னும் மாணவர் ஒருவரின்  கவிதை  நூல் வெளியீட்டின்போது — மாணவனுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து பார்வையாளர்களை கண் கலங்க வைத்தார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்.      கவிதை நூல் ஒன்றை தயார் செய்த மன்னார் ஏ.ஆர்.ஏ ரஹீம் மாணவன் ஒருவர், அமைச்சர் ரிஷாதை ஒரு வருடங்களுக்கு முன்னர் சந்தித்து – நூல் வெளியீட்டுக்கு பிரதம  அதிதியாக அழ்ளைதுள்ளார். . அப்போது, தனக்கு வீடு இல்லாதது பற்றியும் அமைச்சரிடம்…

Read More