Headlines

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது? மக்களிடம் கருத்துக் கேட்க மு.கா. முடிவு

நமது நிருபர் 2015 இல் நடத்துவதற்கு உத்தே சிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி எத்தகையை நிலைப் பாட்டை எடுக்கவேண்டும் என்பது பற்றி முஸ்லிம் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்துவதற்கு அரசின் பங் காளிக்கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இது விடயம் குறித்து அடுத்த மாதம் முதல் மாவட்ட ரீதியாக மக்களிடம் அபிப்பிராயம் கோரப்படும் என்று மு.கா வின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி எம்.பி. நேற்று  தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும்…

Read More

ஜெயிலில் வேலைக்கு போகும் ஜெயலலிதா

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை விதிமுறைப்படி ஊதுபத்தி உருட்டுவது, காய்கறி நறுக்குவது போன்ற வேலைகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா, சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் 14 நாட்களாகின்றன.பொதுவாக, தண்டனை கைதி ஒருவர், சிறையில் அடைக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் அவருக்கு ஏதாவது வேலை கொடுக்க வேண்டும் என்பது விதிமுறை. இதன்படி ஜெயலலிதா, சசிகலா, இளவரசிக்கு ஊதுபத்தி உருட்டுவது, காய்கறி நறுக்குவது போன்ற வேலை ஒதுக்கப்பட்டு உள்ளன. ஆனால், இவையெல்லாம் ஆவணத்தில் பராமரிப்பதற்காக ஒதுக்கப்பட்ட வேலைகள். ஆனால் ஜெயலலிதாவின்…

Read More

நோபல் பரிசு பெற்றார் மலாலா

இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசப்ஸாய் ஆகியோருக்கு இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நோபல் குழுவின் தலைவர் தோர்ப் ஜோயெர்ன், இன்று அமைதிக்கான நோபல் விருதுகள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். அமைதிக்கான நோபல் பரிசுக்கு மொத்தம் 278பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியாக இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான் சிறுமி மலாலா ஆகியோருக்கு நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

நாம் களமிறக்க போகும் பொது வேட்பாளர் அரசுக்கு அதிர்ச்சியாக அமைவார் – மங்கள சமரவீர

அரசாங்கத்தை வீழ்த்தக்கூடிய பலமான எதிரணியினை உருவாக்கும் நோக்கிலேயே எமது நடவடிக்கை அமைந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் போது வேட்பாளர் யார் எனும் துரும்புச்சீட்டினை களத்தில் இறங்குவோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார். சோபித தேரரா? சந்திரிக்காவா? ரணிலா? என யாரும் குழம்பத் தேவையில்லை. வெகு விரைவில் விடை கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார். ஜனாதிபதி தேர்தலின் பொது வேட்பாளர் தொடர்பில் எதிர்கட்சிகள் சிந்துத்துக் கொண்டிருக்கும் நிலையில் முக்கிய அரசியல் பிரமுகர்கள்…

Read More

இலங்கை பெண் குவைத்தில் படுகொலை

குவைத்தில் இலங்கைப் பெண் ஒருவரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்தாக கூறப்படும் ஆப்கானிஸ்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து குவைத் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். தமக்கு கிடைத்த தகவல் ஒன்றின்படி, பஹாலில் பிரதேச இடம் ஒன்றில் இருந்து 33வயதான இலங்கைப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. இதனையடுத்து, சுமார் 3 மணியத்தியாலங்களுக்குள் இறந்த பெண்ணின் நண்பர் என்ற ஆப்கானிஸ்தானியர் கைது செய்யப்பட்டார். விசாரணைகளின்போது தமது நண்பருடன் குறித்த இலங்கை பெண் உறவை கொண்டிருந்ததாக சந்தேகித்தே தாம்…

Read More

துருக்கி எல்லை ஐ.எஸ்.ஐ எஸ்ஸிடம் வீழ்ந்தது!

சிரியாவில் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக துருக்கி தனியாக தரைவழி தாக்குதல்களை நடத்தாது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மவ்லுத் கவ்சொக்லு குறிப்பிட்டுள்ளார். இதில் துருக்கி சென்றிருக்கும் நேட்டோ தலைவர் ஜன் ஸ்டொல் டன்பேர்க்குடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் துருக்கி அரசு தனது சிரிய எல்லைப் பகுதியில் விமானம் பறக்க தடை வலயம் ஒன்றை அறி வித்துள்ளது.   இந்நிலையில் சிரியாவின் துருக்கி எல்லை நகரான கொபானியின் மூன்றில் ஒரு பகுதி ஐ.எஸ். போராளிகளின் கட்டுப்பாட்டில் வீழ்ந்திருப்பதாக…

Read More

குஜராத் மாநிலத்தில் மோடியால் பாதிக்கப்பட்டவர்கள் போன்று இருக்க மாட்டோம் – பிலாவல் பூட்டோ எச்சரிக்கை

காஷ்மீர் மாநிலத்தில் ஒரு அங்குலம் கூட விட்டுத்தர மாட்டோம் என பாகிஸ்தான் மக்கள் கட்சிதலைவர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். இது குறி்த்து அவர் கூறியிருப்பதாவது, காஷ்மீர் விவகாரத்தை பொறுத்த வரையில் , குஜராத் மாநிலத்தில் மோடியால் பாதிக்கப்பட்டவர்கள் அமைதியாய் இருப்பதை போல் இருக்க முடியாது எனவும், காஷ்மீர் மாநிலத்தை பாகிஸ்தானின் ஒரு பகுதி தான் . எனவே காஷ்மீரின் ஒரு அங்குலப்பகுதியை கூட யாருக்கும் விட்டுத் தர முடியாது என கூறியுள்ளார். மேலும் தனது டுவிட்டர் இணையத்தில்…

Read More

அமெரிக்கா அதிர்ச்சி….. ISIS தொடர்ந்து முன்னேற்றம்

ஈராக், சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். களை அழிக்க அமெரிக்கா மற்றும் நேச நாட்டு படைகள் விமான தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர்ந்து பல இடங்களிலும் இந்த தாக்குதல் நடக்கிறது. அமெரிக்கா தனது தரைப்படையை பயன்படுத்தாமல் விமான படை மூலமே ஐ.எஸ். களை ஒழித்து விடலாம் என்று கருதியது. ஆனால் இதற்கு போதிய பலன் இருப்பதாக தெரியவில்லை. பலமுனைகளில் அமெரிக்கா தாக்குதல் நடத்தினாலும் ஐ.எஸ். வாதிகள் ஈராக்கிலும், சிரியாவிலும் தொடர்ந்து முன்னேறியபடியே உள்ளனர். சிரியாவில் துருக்கி எல்லையில்…

Read More

பாகிஸ்தானின் நிதியுதவியில் மன்னாரில் 220 வீடுகள் நிர்மாணம்

வட மாகாணத்தின் மன்னார் மற்றும் நானாட்டான் ஆகிய பிரதேசங்களில் 220 வீடுகளை நிர்மாணிக்க பாகிஸ்தான் அரசாங்கம் முன்வந்துள்ளது. யுத்தகம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்குவதற்காகவே இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதற்காக பாகிஸ்தான் அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியினை வழங்கியுள்ளது. இதற்கான இலங்கை அரசாங்கத்திடம் காசோலை நேற்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் காசீம் குரைஷி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிடம் இந்த காசோலையினை கையளித்தார். கைத்தொழில்…

Read More

வவுனியா, கண்டான்குளம் பிரதேசத்திற்கான மின்சார விநியோகத்தை திறந்து வைத்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன் (படங்கள் இணைப்பு )

வவுனியா, கண்டான்குளம் பிரதேசத்திற்கான  மின்சார விநியோகத்தை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று திறந்து வைத்தபோது  வைப்பதை படங்களில் காணலாம்.

Read More