Headlines

சர்வதேசத்திற்கு ஜனாதிபதி மஹிந்த எச்சரிக்கை!

இலங்கை விவகாரங்களில் தலையீடும் உரிமை சர்வதேச சமூகத்திற்கு கிடையாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். புனித பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு உத்தியோகபூர்வமாக அழைக்கும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இத்தாலிக்கு விஜயம் செய்துள்ளார். இந்த விஜயத்தின்போது இத்தாலி வாழ் இலங்கை மக்களை சந்தித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சில நாடுகள் இலங்கையில் ஸ்திரமற்ற நிலைமையை ஏற்படுத்தும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளன.  புலிகளை மீள ஒருங்கிணையச் செய்ய ஊக்கமளிப்பதே இந்த நாடுகளின் நோக்கமாக அமைந்துள்ளது….

Read More

பொருத்தமற்ற ஆசனத்தில் அமர மாட்டேன் – மேர்வின்

அரசியலிலிருந்து ஓரம் கட்ட சூழ்ச்சி செய்யப்பட்டதாக பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார். சேர் டி.பி. ஜயதிலக்கத்தான் களனி தொகுதியின் முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர், அவர் பிரதமராகக் கூடிய தகுதியைக் கொண்டவர். உட்கட்சி சூழ்ச்சித் திட்டங்களினால் அவர் ஓரம் கட்டப்பட்டார். சூழ்ச்சித்திட்டமொன்றின் மூலம் இந்தியாவின் உயர்ஸ்தானிகராக பதவி வழங்கப்பட்டது. அதே வேளையை எனக்கும் செய்ய சிலர் முயற்சித்தார்கள். ஒரு ஆண்டும் இரண்டு மாதங்களும் களனி தொகுதி அமைப்பாளர் பதவியை ராஜினாமா செய்திருந்தேன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்….

Read More

சூடுபிடிக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் விவகாரம்

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ் மீதான தாக்குதல் குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸுக்கு எதிராக புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. எனினும் என்ன குற்றச்சாட்டு என்ற விடயம் வெளியாகவில்லை. ஏற்கனவே கடந்த வாரத்தில் ஜனாதிபதி குழுவினர் அமரிக்காவுக்கு சென்றிருந்தபோது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கிறிஸ் நோனிஸின் கன்னத்தில் அறைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இதனையடுத்து நோனிஸ் தமது பதவிவிலகல் கடித்தை சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் வெளியுறவு அமைச்சின்…

Read More

பொதுபலசேனாவின் நிதிச் செயலாளர் கைது!

பொதுபல சேனா அமைப்பின் நிதிச் செயலாளரான வெல்லம்பிட்டியே சுமணதம்ம தேரர் நேற்று இரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 75 லட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் நெருங்கிய சகாவான சுமணதம்ம தேரர் மீது அந்த அமைப்பில் உள்ள ஏனைய உறுப்பினர்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சுமணதம்ம தேரர் பேலியகொடவில் உள்ள வீடொன்றில் ஒழிந்திருந்திருப்பதாக கிடைத்த தகவல் ஒன்றை…

Read More

அசின் விராது + 969 அமைப்பு தீவி­ர­வாதியல்ல!

மியன்­மாரின் மதத் தலைவர் அசின் விராது தேரரின் இலங்கை விஜயம் நாட்டின் பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லான விட­ய­மல்ல. இலங்­கைக்குள் குழப்­பங்கள் ஏற்­படும் வாய்ப்­புக்கள் இல்­லை­யென தெரி­வித்த இராணுவ ஊடகப் பேச்­சாளர் பிரி­கே­டியர் ருவான் வணி­க­சூ­ரிய தெளஹித் ஜமாஅத் அமைப்­பிற்கு இலங்கை வர அனு­மதி உண்­டெனின் விராது தேரர் ஏன் வரக்­கூ­டாது எனவும் கேள்வி எழுப்­பினார். மியன்­மாரின் 969 அமைப்பின் தலைவர் அசின் விராது தேரரின் இலங்கை விஜயம் நாட்டின் பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லா­னதா என்று வின­விய போதே பிரி­கே­டியர் ருவான்…

Read More

ஞானசாரரை, மாடுகளுடன் ஒப்பிடும் சோபித தேரர்..!

பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் போன்றவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப் முடியாது என மாதுலுவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். அரச சார்பற்ற நிறுவனங்களின் கைப்பொம்மையாக சோபித தேரர் செயற்பட்டு வருவதாக ஞானசார தேரர் அண்மையில் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு பதிலளிப்பதன் மூலம் அவர்களுக்கு ஓர் இடம் ஏற்பட்டு விடும் என சோபித தேரர் தெரிவித்துள்ளார். மாடுகள் இருக்கின்றனதானே? (இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு,அவ்வாறான மாடுகளுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை) பதிலளிக்காமல் இருப்பதே…

Read More

எனக்கு பள்ளிவாசலுக்குச் செல்லக்கூட முடியாத நிலை இருக்கிறது – அசாத் சாலி

மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலிக்கு உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரான அசாத் சாலி, மத்திய மாகாண சபை உறுப்பினராக உள்ளார். முஸ்லிம் தரப்பில் இருந்து அரசாங்கத்தை விமர்சிப்பதில் முதலாமவராகவும் உள்ளார். இதன் காரணமாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மாகாண சபை உறுப்பினர் என்ற வகையில் அவரது கைத்துப்பாக்கிக்கான லைசென்ஸை புதுப்பிக்க பொலிசார்…

Read More

கட்டார் வாழ் இலங்கை சகோதரர்களுக்கான ஹஜ்ஜுப் பெரு நாள் விளையாட்டு

الســـــــــــلام عليــــكم ورحمــــــة الله وبركاتــــــــــه கட்டார் வாழ் இலங்கை சகோதரர்களுக்கான ஹஜ்ஜுப் பெரு நாள் விளையாட்டு நிகழ்ச்சி. ஏற்பாடு Sri Lanka Da’wa Centre – Qatar இடம் MIC Sports Club– Ummsaeed Time 05/10/2014 (காலை 9 இலிருந்து ) பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான விஷேட விளையாட்டு நிகழ்ச்சிகள் பதிவுகளுக்கு முந்திக்கொள்ளுங்கள் . جـــــــزاكم الله خيـــــــــــــــــــــــرا ،،،،، Sri Lanka Dawa Centre Qatar – SLDC…

Read More

ஞானசாரர் விவாதத்திற்கு செல்வாரா..?

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மேல்மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் நேரடி விவாத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபலசேனா முன்னெடுத்துவரும் பொய் பிராசரங்கள் குறித்தே இவ்  நேரடி விவாதத்திற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து கலகொட அத்தே ஞானசார தேரருக்கு அவர் கடிதமொன்றையும் அனுப்பியுள்ளார். பொதுபல சேனாவின் சங்க சம்மேளன மாநாடு கொழும்பில் அண்மையில் நடைபெற்றது. இதன்போது…

Read More