Headlines

இலங்கைக்கு எதிராக ‘டெசோ’ தீர்மானம் நிறைவேற்றம்

தமிழீழ ஆதரவாளர்களுக்கான டெசோ கூட்டம் தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில்  இன்று சென்னையில் நடைபெற்றது. அதில், இலங்கை பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், சர்வதேச விசாரணை குழு இந்தியா வர விசா வழங்க வேண்டும், ஐ.நா.வின் பொது உறுப்பினர் கூட்டத்தில் பங்கேற்க இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ்வை அனுமதிக்க கூடாது, தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அண்ணா…

Read More

அரசியல் கட்சிகளுடன் தனித்தனியாகவே பேச்சு

ஊவா மாகாண தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய,அனைத்துக் கட்சிகளுடனும் ஒரே நேரத்தில் பேசாமல்,ஒவ்வொரு கட்சியுடனும் தனித்தனியாகவே பேசவுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. இப்பேச்சுவார்த்தைகள் நாளையும்,நாளை மறுதினமும் இடம்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (DC)

Read More

சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான வழிகாட்டி பயிற்சிக்கருத்தரங்கு ; பிரதம அதிதியாக அமைச்சர் ரிசாத்

திவிநெகும திணைக்களத்தின் ஏற்பாட்டில் மன்னார் மவாட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சமுக அபிவிருத்தி குழு தலைவர்கள் ஆககேயார்களுக்கான வழிகாட்டி பயிற்சிக்கருத்தரங்கு இன்று மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன்  உரையாற்றுவதை படத்தில் காணலாம்.  இந் நிகழ்வில்  பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாறுக் , வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் மற்றும் மன்னார் அரசாங்க அதிபர் உட்பட பலர் கலந்து…

Read More

யுவதியிடம் அறை வாங்கிய இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி

காதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்காகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் அவரை குருநாகல் வைத்தியசாலைக்கு மேலதிக சிசிக்சைக்காக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அண்மையில் யுவதி ஒருவர் இளைஞன் ஒருவரை வாரியபொல பஸ் நிலையத்தில் வைத்து தாக்கிய சம்பவம் முகநூலில் வைரஸ் போன்று பரப்பப்பட்டது. தாம் அணிந்திருந்த ஆடை குறித்து, அந்த இளைஞன் கூறிய வார்த்தைக்காகவே யுவதி அவரை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் இளைஞர் எவ்வித எதிர்ப்புகளையும் அதன்போது வெளியிடவில்லை. 30 வயதான செல்வா என்ற ரொபர்ட் தாசன் சந்திரகுமார்…

Read More

தேனீருக்காக கோப்பியையும் கோப்பிக்காக விஸ்கியையும் கூட்டமைப்பினர் கோருவார்கள்: டக்ளஸ்

இந்திய இணையத்தளம் ஒன்றுக்கு கருத்துரைத்துள்ள டக்ளஸ் தேவானந்தா, தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் தேனீர் வேண்டுமா? என்று கேட்டால் கோப்பி வேண்டும் என்பார்கள். கோப்பி வேண்டுமா? என்று கேட்டால் அவர்கள் விஸ்கி வேண்டும் என்பார்கள். அதாவது அவர்கள் தமிழர் பிரச்சினையை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்காக இவ்வாறான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது 13வது அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோருகிறது. அரசாங்கம் 13வது சரத்தை அமுல்படுத்தினால் அதன்போது கூட்டமைப்பினர் தமது கோரிக்கையை மாற்றிக்கொள்வார்கள் என்று…

Read More

விளையாட்டுத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கான உதவித்தொகை அமைச்சர் ரிசாத் பதியுதீனினால் வழங்கிவைப்பு

மன்னார் மாவட்டத்தில் விளையாட்டுத் துறைகளில் சிறப்புத் திறமை காட்டும் மாணவர்களுக்கு விளையாட்டுத் துறை அமைச்சால் மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை இன்று மன்னார் நகர சபையில் இடம்பெற்ற நிகழ்வின் போது குறித்த மாணவர்களுக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீனினால் வழங்கி வவைக்கப்பட்டது. அமைச்சர் ரிசாத் பதியுதீன் , விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமயிடம் வேண்டிக் கொண்டதற்கிணங்க குறித்த உதவித் தொகை மன்னார் மவாட்டத்தைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் 170 மாணவர்களுக்கு தொடர்ச்சியாக மாதந்தோறும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Read More

2016 க்கு முன் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டால் நீதிமன்றம் செல்வேன் – முன்னாள் பிரதம நீதியரசர்

2016ஆம் ஆண்டு நவம்பருக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணையாளர் நடவடிக்கை எடுத்தால் அதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கமுடியும் என்று முன்னாள் பிரதமநீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார். இந்தநிலையில் தேர்தல்கள் ஆணையாளர் குறித்த முயற்சியை மேற்கொண்டால் உயர்நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்யப்போவதாக சரத் என்.சில்வா குறிப்பிட்டுள்ளார். அரசியல் அமைப்பின் 31.2 சரத்தின்படி இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட ஒருவர் மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிடமுடியாது. எனினும் இது 2010ஆம் ஆண்டில் 18வது சீர்திருத்தம் மூலம் மாற்றம்…

Read More

அமெரிக்காவுக்கு ஆபத்து ஏற்பட்டால், ஐ.எஸ். அமைப்புடன் நேரடியாகப் போரிடுவோம்

ஐ.எஸ். வாதிகளால் அமெரிக்காவுக்கு ஆபத்து ஏற்பட்டால், ஐ.எஸ். அமைப்புடன் நேரடியாகப் போரிடுவோம் என அமெரிக்க கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதி மார்ட்டின் டெம்ப்ஸி கூறியுள்ளார். அவர் ஆப்கானிஸ்தான் செல்லும் வழியில் விமானத்தில் பயணம் செய்யும் போது இவ்வாறு தெரிவித்தார்.

Read More

உலகை ஆளும் ஒரு குட்டி நாடு?

அது  ஒரு  குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ? காரணங்கள் பல உண்டு. திருமணம் செய்வதென்றால் அவர்கள் ஏதாவது ஒரு துறையில் Doctorate பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம். கல்லூரியில் சேர முதலில் 5000 டொலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டொலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம் இதனால்…

Read More

பலஸ்தீன மக்களின் சுதந்திரத் தாகம் பற்றி ஐன்ஸ்டீன்

எனது சிந்தனைப்படி யூத நாடு என்ற கருத்து பிழையானது. அது ஏன் தேவை என்பதை என்னால் விளங்க முடியவில்லை. அதனுடன் குறுகிய மனப்பான்மையும் பொருளாதாரத் தடைகளும் தொடர்புருகின்றன. அது தீமையானது என நான் நம்புகின்றேன். நான் அதற்கு எதிராகவே இருந்து வருகின்றேன் . யூத நாடொன்று அமைப்பதைவிட அரேபியர்களுடன் சேர்ந்து வாழக்கூடிய பொருத்தமான உடன்படிக்கைக்கு வருவதை நான் ஆதரிக்கின்றேன். நடைமுறைப் பிரச்சினைகளுக்கு அப்பால் நாட்டுக்கான எல்லைகள், இராணுவம், தற்காலிக அதிகாரத்துக்கான ஏற்பாடு என்பவை எவ்வளவுதான் எளிமையானவையாக இருந்தாலும்,…

Read More

இளைஞர் பாரளுமன்றத்தின் 10ஆவது அமர்வு 30 மற்றும் 31ம் திகதிகளில்…

பழுலுல்லாஹ் பர்ஹான் இலங்கை இளைஞர் 2ஆவது பாரளுமன்றத்தின் 10ஆவது அமர்வு எதிர்வரும் 30 மற்றும் 31ம் திகதிகளில் மஹரகம இளைஞர் நிலையத்தில், இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப் பெரும தலைமையில் இடம்பெறும் என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியூம் பெரேரா தெரிவித்தார். இப்பாராளுமன்ற முதல் நாள் அமர்வுக்கு பிரதம அதிதியாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்த்தானிகர் திருமதி ரெபின் மூடி கலந்து கொண்டு விசேட உரையாற்றவுள்ளார். முதல்…

Read More

லெபனான் நாட்டு போராளிக் குழு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்

காஸாவில் உள்ள ஹமாஸ் போராளிகளை ஒடுக்குவதற்காக கடந்த 50 நாட்களாக சண்டையிட்டு வரும் இஸ்ரேல் நாட்டுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தும் விதமாக லெபனான் நாட்டில் இயங்கிவரும் போராளிக் குழுக்களும் இஸ்ரேல் மீது ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளன. இஸ்ரேல்- லெபனான் எல்லைப்பகுதியில் உள்ள கிர்யட் ஷ்மோனா மற்றும் மெடுலா நகரங்களின் மீது லெபனான் போராளிகள் 2 ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவித்த இஸ்ரேல், லெபனான் எல்லையோரமுள்ள பகுதிகளில் போர் விமானங்களின் மூலம் தேடுதல் வேட்டை நடத்தி…

Read More