சீரற்ற காலநிலையால் மூவர் மரணம்
சீரற்ற காலநிலை காரணமாக கடந்த சில நாட்களில் மாத்திரம் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. தங்காலைப் பிரதேசத்தில் இருவரும், யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கி ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதேவேளை, மொனராகலை மாவட்டத்தை தாக்கிய வறட்சி மற்றும் கடும் காற்று காரணமாக மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக இந்த நிலையம் சுட்டிக்காட்டுகின்றது. மொனராகலை மாவட்டத்தில் மாத்திரம் வறட்சி காரணமாக 53 ஆயிரத்து 512 குடும்பங்களும் கடும் காற்று காரணமாக…
