Headlines

சுற்றுலா அல்லது கல்வி வீஸாவில் வேலை வாய்ப்புக்காக செல்ல வேண்டாம்

ற்றுலா அல்லது கல்வி வீஸாவில் டுபாய், மலேசியா போன்ற நாடுகளுக்கு தொழிலுக்காக ஆட்களை அனுப்பும் மோசடி வியாபாரம் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது. சுற்றுலா மற்றும் கல்வி கற்பதற்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து அவர்களை அந்த நாடுகளில் தவிக்க விட்டுவிடுவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் கூறியது. இத்தகைய குழுக்கள் குறித்து பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பணியக தலைவர் அமல் சேனாதிலங்கார தெரிவித்தார். கடந்த காலங்களில் இவ்வாறான பல சட்டவிரோத…

Read More

பள்ளிவாசலுக்குள் ஷியாக்கள் வெறியாட்டம் – 70 முஸ்லிம்கள் வபாத்

ஈராக்கில் ஷியா-சன்னி பிரிவு மக்களுக்கிடையே ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இனப்பகை நீடித்து வருகிறது. சன்னி பிரிவினர் சிறுபான்மையாக வாழும் பகுதிகளில் ஷியா பிரிவினரும், ஷியா இனத்தவர் சிறுபான்மையாக வாழும் பகுதிகளில் சன்னி இனத்தவரும் மேலாதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவ்வகையில், ஒடுக்கப்படும் பிரிவினர் தகுந்த நேரம் பார்த்து ஆதிக்கவாதிகள் மீது திடீர் தாக்குதல் நடத்தி நிலைகுலையச் செய்கின்றனர். இத்தகைய வன்முறை தாக்குதல்களில் இருதரப்பிலும் இது வரை லட்சக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். இதற்கிடையே, ஐ.எஸ்.போராளிகளும் ஈராக்கில் சமீபகாலமாக ஏராளமான வன்முறை…

Read More

காட்டிக்கொடுப்பவர்களை சுட்டுக்கொன்ற ஹமாஸ் போராளிகள்..!

இஸ்ரேல் நாட்டிற்கு இன்பார்மர்களாக செயல்பட்டதாகக் கூறி 18 பேரை ஹமாஸ் போராளிகள் கொலை செய்துள்ளனர். காசாவின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் விமான தாக்குதல் நடத்தியதில், ஹமாஸ் இயக்கத்தின் 3 கமாண்டர்கள் கொல்லப்பட்டனர். தங்கள் இயக்கத்தின் தலைவர்களை குறிவைக்கும் இஸ்ரேலை பழிதீர்ப்பதாக ஹமாஸ் சபதம் செய்தது. இந்நிலையில், 22-08-2014 அதிகாலையில் இன்பார்மர்கள் என்று சந்தேகிக்கப்படும் 18 பேரை காசா நகர காவல் தலைமையகத்தில் கொன்றதாக பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறினார். இவர்கள் 11 பேரும் ஏற்கனவே காசா…

Read More

கட்டார் மக்களுக்கும், அந்நாட்டு அரசுக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம் – ஹமாஸ்

கட்டாருக்கும் ஹமாசுக்குமிடையிலான உறவு புதிதல்ல. ஹமாஸுக்கு விசாலமான ஒரு சர்வதேச தொடர்பு இருக்கின்றது. கட்டார் வாழ் மக்கள் , அந் நாட்டு அரசுக்கு நாம் எப்போதும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம். குறிப்பாக இயக்கம் என்ற வகையில் கட்டாரின் உதவிகள் ஹமாசுக்கு கிடைக்கின்றது என்பது கருத்தல்ல மாறாக, பலஸ்தீன் மக்களுக்கான உதவிகள் அவை இப்போது இருக்கும் அமீர், இவருக்கு முன்னாள் இருந்த அமீர் காசாவுக்கு விஜயம் செய்துள்ளனர்.காசாவின் கீழ்கட்டுமான  அபிவிருத்திக்கு உதவியுள்ளனர். காலித் மிஷால் – பேச்சு

Read More

முஸ்லிம் சகோதரிக்கு மூன்று பிரசவம், 7 குழந்தைகள் முஸ்லிம் சகோதரிக்கு மூன்று பிரசவம், 7 குழந்தைகள்

முதல் இரண்டு பிரசவங்களின்போதும் இரட்டை சிசுக்களை பெற்ற பெண்ணொருவர் தனது மூன்றாவது பிரசவத்தில் மூன்று சிசுக்களை பிரசவித்த விநோத சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு, மரதானையை சேர்ந்த பாத்திமா நிரோஷா என்ற 31 வயதுடைய பெண்ணே இவ்வாறு தனது முன்றாவது பிரசவத்தின்போது 3 ஆண் சிசுக்களை பெற்றுள்ளார். இப்பெண் ஏற்கனவே முதலாவது பிரசவத்தில் இரட்டை சிசுக்களை பிரசவித்துள்ளதுடன் இரண்டாவது பிரசவத்திலும் இரட்டை சிசுக்களை பெற்றார். இந்நிலையிலே மூன்றாவது பிரசவத்திலும் அவர் மூன்று சிசுக்களை பிரசவித்துள்ளார். சொய்சா பிரசவ…

Read More

எபோலா வைரஸ் இலங்கைக்கும் பரவும் அச்சுறுத்தல்!

கிழக்கு நாடுகளில் மிக வேகமாக பரவி வரும் இந்த எபோலா வைரஸ், இலங்கைக்குள் வரும் சந்தர்ப்பங்கள் அதிகம் இருப்பதாகவும் அதனை தடுக்க துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் விசேட மருத்துவர் திபால் பெரேரா தெரிவித்துள்ளார். கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் ஐக்கிய நாடுகள் அமைதிப் படையில் பணியாற்றும் இலங்கை இராணுவத்தினர், அங்கு சுற்றுலா சென்ற இலங்கையர்கள், அங்கு தொழில் புரிந்து வருபவர்கள் நாட்டுக்கு திரும்பி வரும் போது, அந்த வைரஸ் இலங்கைக்குள் பரவக் கூடும். இந்த வைரஸ்…

Read More

”இஸ்ரேலுக்கும், பொதுபல சேனாக்கும் சார்பாக மஹிந்த ராஜபக்ஸ செயற்படுகிறார்” தம்பர அமில தேரர்

தமிழில் – எம்.எம். முஹிடீன் இஸ்லாஹி இலங்கையில் சிங்கள, முஸ்லிம் கலவரம் ஏற்பட்டு நூறு வருடங்கள் பூர்த்தியாகும் தருவாயில் உள்ளது. மீண்டும் நூறு வருடங்களுக்குப் பின்னரும் ஆரம்பத்தின் அதேநிலைக்கு வேறு ஒரு முறையில் சென்று கொண்டிருக்கின்றது. எனினும்,  கிடைக்கக்கூடிய பிரதிபலன்கள் முன்னையதைவிட மோஷமானதாக இருக்கும். கடந்த நாட்களில் ஏற்பட்ட சம்பவங்கள்,  இதற்கான நிழற் பிரதிகளேயாகும். நாட்டினுள் பரவுகின்ற இனவாதப் பின்னணி பற்றி அரசியல் தொடர்பான ஸ்ரீ ஜயவர்தனபுற பல்கலைக் கழகத்தின் தொல் பொருளியல் தொடர்பான சிரேஷ்ட விரிவுரையாளர்…

Read More

கடலுக்கு செல்லும் மீனவர்களின் நன்மை கருதி கடற்கரையில் பள்ளிவாயல் திறந்து வைப்பு (படங்கள்)

(பழுலுல்லாஹ் பர்ஹான்) ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தின் அனுசரனையுடன் அபிவிருத்திற்கும் மனிதாபிமானத்திற்குமான சர்வதேச அமைப்பின் 2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கடலுக்கு செல்லும் மீனவர்களின் நன்மை கருதி பூநொச்சிமுனை கடற்கரையில் மஸ்ஜிதுல் பஹ்ர் பள்ளிவாயல் 22-08- இன்று வெள்ளிக்கிழமை அஷர் தொழுகையுடன் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இதன் போது இப் பள்ளிவாயளின் நினைவுக் கல்லை சவூதி அரேபிய அல் கஸீம் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அபூ ஸூலைமான் அப்துல்லாஹ் ஸாலிஹ் அல் ஹத்லூல், சவூதி…

Read More

ஹமாஸ் தளபதிகளை இஸ்ரேலுக்கு காட்டிக்கொடுத்தது யார்..?

இஸ்ரேலிய கைகூலிகளான எகிப்திய ஸீஸீயின் இராணுவமே ஷஹீதுகள் மூவரும் ரபாஹ் பிரதேசத்தில் உள்ளதாக இஸ்ரேலிய இராணுவத்திற்கு தகவல் வழங்கியதாக பிரபல ஊடகவியலாளர் அஹ்மத் மனஸூர் தெரிவித்துள்ளார்

Read More

ஹமாஸ் தலைவர்களின் நோக்கிய இறுதிப்பயணத்தில் சனத்திரள்

(Abu Ariya) இலட்சக்கணக்கான ஈமானிய்ய உள்ளங்களின் பிரார்த்தனையோடுதான் இந்தப் போராளிகள் புறப்படுகிறார்கள். 21-08-2014 அதிகாலை இஸ்ரேலால், ரபா பகுதியில் மேற்கொண்ட விமானத்தாக்குதலில் ஷஹீதாக்கப்பட்ட, 1. ராஇத் அல் அத்தார் 2. முஹம்மத் அபூ சம்மாலா 3. முஹம்மத் பர்ஹும் ஆகிய சகோதரர்களின் சுவனத்தை நோக்கிய இறுதிப்பயணத்தில் கலந்து கொண்ட காஸாவின் சனத்திரள்..!

Read More

ISIS கோழைகள், நிச்சயம் தோற்பார்கள் – ஒபாமா சாபம்

அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட செயல் ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால், நாங்கள் ஈராக்கில் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதை நிறுத்தப் போவதில்லை. அஞ்சப் போவதில்லை. மக்களைக் காக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம். எந்தக் கடவுளும் இந்த அக்கிரமச் செயலை பொறுத்துக் கொள்ள மாட்டார் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலி கொடூரமாக தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டதற்கு அவர் கடும் கண்டனமும்…

Read More

உள்ளதை உள்ளபடி சொன்னவர் நவிபிள்ளை – பான்கி மூன்

ஐநாவின் செயலாளர் நாயகம் பான்கி மூன், மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் ஐநா பாதுகாப்புச்சபை உலக நாடுகளின் அரசுகளுடன் ஒன்றிணைதல், ஒத்துழைத்தல் மற்றும் சேர்ந்து செயற்படுதலுக்கான புதிய காலகட்டம் உருவாகியிருப்பதாக நம்பிக்கை வெளியிட்டார். உலக அளவில் நம் சமகாலத்தில் முகம் கொடுத்துக்கொண்டிருக்கும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நவி பிள்ளையின் நேர்மையான கருத்துக்கள் மற்றும் நகாசுபூச்சு செய்யப்படாத வெளிப்படையான அறிக்கைகளில் இருந்து ஐநா பாதுகாப்புச்சபை உறுப்பினர்கள் பெருமளவு பயன்பெற்றார்கள் என்றும் அவர் கூறினார். “தாம் கண்டதை…

Read More