அமைச்சர் றிஷாத் முஸ்லிம் சமூகத்துக்காக துணிவுடன் முன் நகர உறுதிபூண்டுள்ளார்
நாட்டில் மீண்டும் இன ,மத வன்முறையை தூண்டும் விதமாக நாட்டின் உத்தியோகபூர்வமற்ற காவல் படையாக தம்மை பிரகடனப்படுத்தி தடைகள் இன்றி செயல்பட்டுவரும் தீவிரவாத அமைப்பான பொது பல சேனாவின் அடாவடித்தனங்களை சட்டரீதியாக ஒடுக்கும் நடவடிக்கைகளை அறிவித்தது போன்று முன்னெடுக்க அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் மீண்டும் உறுதிபூண்டுள்ளார் . பொது பல சேனா போன்ற தீவிரவாத அமைப்புக்களின் அடாவடித்தனங்களை ஜனாதிபதியும் பாதுகாப்புத் தரப்பும் கட்டுப்படுத்த தவறியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுத்தீன் தெரிவித்துள்ளார்…
