பொதுபல சேனாவின் நடவடிக்கைகளை கண்டித்து அமைச்சர் றிஷாத் பதியுதீன் விடுத்துள்ள அறிக்கை
1990ஆம் ஆண்டு வடமாகாணத்திலிருந்து புலிகளால் விரட்டப்பட்டு கடந்த 24 வருடங்களாக அகதி முகாம்களிலும் ஓலைக் கொட்டில்களிலும் அவதி வாழ்க்கை வாழ்ந்து வரும் வடபுல முஸ்லிம்கள் மீண்டும் சமாதான சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து தாம் வாழ்ந்த பிரதேசங்களில் குடியேறும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முயற்சியை தடுக்கும் வகையில் பொதுபலசேனா அமைப்பு அண்மையில் பல்வேறு காழ்ப்புணர்வு கொண்ட கருத்துக்களை பத்திரிகைகளிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும் பரப்பி வருகின்றது. முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ச்சியாக மிகவும் கேவலமான, கீழ்த்தரமான கருத்துக்களை தெரிவித்துவரும் பொதுபலசேனா தற்போது…
