முஸ்லிம்களைத் தாக்குவதை பொதுபல சேனா உடனடியாக நிறுத்த வேண்டும்-வை.எல்.எஸ். ஹமீட்
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்களைப் பாவித்து முஸ்லிம்களைத் தாக்குவதை பொதுபல சேனா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்ககப்பட்டுள்ளதாவது, பொதுபலசேனாவின் சித்தப்பிரமை பிடித்த சிலர் முளைக்கும் நாக்கிற்கும் தொடர்பில்லாமல் முஸ்லிம்களை வம்பிற்கு இழுப்பதை தொடர்ந்தும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. அதேநேரம் அவர்கள் பாவிக்கின்ற வார்த்தைப்பிரயோகங்களை மற்றவர்களுக்கும் பாவிப்பதற்கு நேரம் தேவைப்படாது என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் கீழ்த்தரத்திற்கு நாங்களும்…
